India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிராமங்களில் பண்ணைக் கழிவுகளை எரியூட்டும் மறுசுழற்சி செய்து மக்கும் உரமாக்குதல் பற்றிய, ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் வருகிற 20ம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அறிவியில் நிலையத்தை நேரிலோ 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை கொள்ளலாம்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.138-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து, நேற்று ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.45 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி வரத்து கடுமையாக குறைந்து விட்டதால், ஒரு கிலோவுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களின், வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொது மக்கள் பார்வையிடும் வகையில், அனைத்து வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது எனவும்
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்
திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாகவும் பிற துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாகவும் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வாக்காளர் அடையாள அட்டை வழங்கிட சிறப்பு முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21ல் நடைபெற உள்ளது என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல், ராசிபுரம் வட்டம் இராசிபுரம் நகரில் இருந்து பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் அரைகுறை ஆடையுடன் போதை ஆசாமி ஒருவர் இன்று ரகளையில் ஈடுபட்டார். இந்த காட்சியை காணும் பொதுமக்கள் மற்றும் பெண்களை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. மேலும் போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையில் அமர்ந்து அட்டகாசம் செய்து வந்தார்.
தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு பொறுப்பேற்று உள்ளார். மேலும் 2வது முறையாக மீண்டும் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் ராம்குமார் டெல்லியில் நேற்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் மாதம் 25.06.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு விரால் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.ஆகையால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள 04286 04286 266345, 266650, 7358594841 என்ற எண்ணில் பதிவு செய்து பயன்பெறலாம்.
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இணைப்பதிவாளா் க.பா.அருளரசு தெரிவித்துள்ளாா்.நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு ஜூலை 19-க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்
Sorry, no posts matched your criteria.