India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழர்களின் பாரம்பரிய கலையான, சிலம்பக்கலையை ஊக்குவிக்கும் வகையிலும், அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள கந்தசாமி கண்டர் பள்ளி மைதானத்தில் இன்று முதல் தினமும் காலை 6.30 முதல் 8 மணி வரை மாணவ மாணவியர்களுக்கான சிலம்பம் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.121 ஆனது. முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் நகராட்சிக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரித்தொகையை ஏப்ரல் 30-க்குள் செலுத்துவோருக்கு ஐந்து சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இணையதளம் வாயிலாக சொத்து வரியை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர் வக்கீல் ராஜகோபால் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் வக்கீல்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்று வந்தது. எஸ்பி ராஜேஷ் கண்ணன் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ..இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர் ,எஸ்ஐ ஆகியோர் வரவேண்டும் என்றனர்.
பாரதிய ஜனதாக் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணன் ராஜேந்திரன் ஆகியோர் ஆன்மீகம் மற்றும் ஆலை மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் ஏற்பாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை, கால்நடை மற்றும் பராமரிப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடனான பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்வது குறித்து கலெக்டர் உமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் சுகாதார அலுவலகம் மற்றும் கோழி பணியாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சலுக்கு இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் கோழி மட்டும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வலியுறுத்தப்பட்டன.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக புவி தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகிக்க புவி வடிவில் மனித சங்கிலி அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாணவ மாணவியரும் மனிதன் வாழ தகுந்த இந்த புவியை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றும், மண்வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்களவை தேர்தல் முடிவுற்றுள்ளன நிலையில் நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா இன்று (22.4.2024) பதிவான மின்னணு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் திருச்செங்கோடு வட்டம், எளையாம்பாளையத்தில் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால்,நாமக்கல் சுற்றுவட்டார கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.மேலும் தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
Sorry, no posts matched your criteria.