India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு குற்றவியல் சட்ட மாற்றங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருகின்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்ற இந்த சட்ட திருத்த மாற்றங்களை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) மோகன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. அதற்கு நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், மானிய விலையில் நிலக்கடலை விதைகளை கிடைக்கிறது என கூறியுள்ளார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் பேருந்து நிலையத்தில், வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அருகில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு, வியாபாரிகளிடம் சந்தை தினசரி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
நாமக்கல்லில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது. திருநங்கைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக சிறப்பு குறைதீா் முகாம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது என ஆட்சியர் உமா தகவல்
நெல் வயல்களில், ஏரி தண்ணீருடன், நாமக்கல் நகராட்சியிலிருந்து வரும் கழிவு நீர் துாசூர் ஏரியில் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளதாக வந்த புகாரையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்து, எட்டு இடங்களில் நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். நெல் வயல்களில் ஏரி தண்ணீருடன், நகராட்சி கழிவு நீரும் கலந்ததால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது.
சிறு, குறு &நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரியை 20 % குறைக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜேவிடம் நாமக்கல்லில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.நாடு முழுவதும் 9.26 கோடி விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுதோறும் ரூ. 6,000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், 17-வது நிதி விடுவிப்பு நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் தொடக்கிவைத்தார் பிரதமர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்திக் கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு செய்பவர்கள் மீது இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.
இந்திய பிரதமர் பி எம் கிஷான் 17வது தவணைத் தொகையினை விடுவித்தார்.நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் காணொளி மூலம் நிகழ்ச்சியைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் மத்திய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்புத்துறை மற்றும் சிறுகுறு தொழில்துறை அமைச்சர் சோபா கரந்தலஜே இன்று பங்கேற்று விவசாயிகளுடன் காணொளியை பார்வையிட்டார்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெற ஏதுவாக 3 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கலந்து கொண்டு 3 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் மே 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொது விநியோகத் திட்ட பொருட்களை பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுக்கான ஒதுக்கீட்டினை நடப்பாண்டு ஜூன்-2024 மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.