Namakkal

News June 22, 2024

நாமக்கல்லில் மத்திய அமைச்சருடன் புகைப்படம்

image

2வது முறையாக தகவல் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின், நாமக்கல் மாவட்டத்திற்கு முதல் முறையாக முருகன் இன்று வருகை புரிந்தார். நாமக்கல்லில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து நாமக்கல் விருந்தினர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்கள் அவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News June 22, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் எல் முருகன் தரிசனம்

image

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அவர் இரண்டாவது முறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

News June 22, 2024

அரசு மகளிர்‌ கல்லூரியில் வரும் 24ல் கலந்தாய்வு

image

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் எம். கோவிந்தராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் மாணவியா் சோ்க்கையின் சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி நடைபெற்றது.

News June 22, 2024

நாமக்கல்லில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில் மழை லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. பகல் வெப்பம் 95, இரவு வெப்பம் 71.6 டிகிரி அளவில் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 22, 2024

நாமக்கல்:திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

image

மாநிலங்களவை உறுப்பினரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜேஸ்குமார் வெளியிட்ட அறிக்கையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10 மணியளவில் மோகனூர் சாலை முல்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார்.வனத் துறை அமைச்சர் மதிவேந்தன்,சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராமலிங்கம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

News June 21, 2024

நாமக்கல்: நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் படி, திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முன் உள்ள பெட்டிக் கடைகளில் காலாவதியான மிட்டாய்கள், குளிர்பானங்கள், போதை மிட்டாய்கள் விற்கப்படுகிறதா என நகர் நல அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் இன்று (ஜூன்.21) திடீர் ஆய்வு செய்தனர்.

News June 21, 2024

தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி

image

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளையர் ஊராட்சியில் இன்று செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ,கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்த, புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

News June 21, 2024

சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த மாணவி; தாய் தொடர்ந்த வழக்கு

image

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் மாணவி கலையரசி என்பவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் தனது மகள் கலையரசி மட்டுமின்றி இதே போன்று அடையாளம் தெரியாத தனது மகள் உள்பட 43 நபர்களுக்கும் சேர்த்து 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவி கலையரசியின் தாயார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்

News June 20, 2024

மெல்வின் மெட்ரோ சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

image

நாமக்கல் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கத்தின் 24-25ம் ஆண்டிற்கான புதிய இயக்குனர் குழு பொறுப்பேற்பு விழா நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. புதிய இயக்குனர் குழு தலைவராக வீரக்குமார் நிர்வாக செயலாளராக சுதாகர் சேவை செயலாளராக ஞானக்குமார் பொருளாளராக முருகேசன் ஆகியோர் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

News June 20, 2024

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் இராஜேஸ்கண்ணன் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், நாமக்கல்லில் கள்ளச்சாராயம் யாரும் விற்கக்கூடாது என்றும், அதையும் மீறி சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றாலோ அவர்களைப் பற்றி தகவலை எனது கட்டுப்பாட்டில் உள்ள இந்த 8838352334 எண்ணில் வாட்சப் மூலம் தெரிவிக்கலாம் எனவும், தகவல் கொடுப்பவர்களின் பெயர் இரகசியம் காக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!