Namakkal

News November 24, 2024

புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

image

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாமக்கல் இராசிபுரம் நகராட்சி கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 24-25இன் கீழ் ரூ10.58 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், ராசிபுரம் நகர மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

News November 24, 2024

நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருச்செங்கோடு அருகே ஆத்தூராம்பாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (29), நவ.22ம் தேதி இரவு சுரேந்தர் தனது டூவீலரில் திருச்செங்கோடு-வெப்படை ரோட்டில் கீழேரிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தி.கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News November 24, 2024

100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக ஏற்பாடு

image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நாமக்கல் எம்பி ராஜேஷ்குமார் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வரும் புதன்கிழமை (நவ.27) நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News November 24, 2024

நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 குறைவு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.73 ஆக சரிவடைந்துள்ளது. இதேபோல் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி நேற்று அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.97 ஆக விற்பனையாகி வருகின்றது.

News November 24, 2024

நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாக அதிகரித்துள்ளது. முட்டை விலை உயர்வடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 24, 2024

நாமக்கல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களின் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 27.11.2024 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு குறைகள் ஏதாவது இருப்பின் அதனை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

News November 23, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
2. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
3.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பைரவர் கோயில்களில் தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
4.நாமக்கல்லில் இன்று முட்டை விலை உயர்வு
5.நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது

News November 23, 2024

நாமக்கல்லில் இன்று முட்டை விலை உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 23ஆம் தேதி நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.55 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை இன்று 5 காசுகள் விலை உயர்த்தப்பட்டு ரூ5.55 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

News November 23, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – சாந்தகுமார் (9498123060), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – ரெங்கசாமி (9487539119), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News November 23, 2024

தங்க கவசத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

error: Content is protected !!