Namakkal

News April 29, 2024

நாமக்கல்: பழைய இரும்பு வியாபாரிகள் கூட்டம்

image

தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்செங்கோட்டில் சங்கத்தின் மாநில தலைவர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் பாருக் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News April 29, 2024

நாமக்கல்: வாக்கு மையத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட
6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றி வாக்குகள் எண்ணும் பணி முடியும் வரை டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளார்.

News April 29, 2024

கோடை வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விலை உயர்வு

image

நாமக்கல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை உயர்வடைந்துள்ளது. எலுமிச்சை பழம் கடந்த வாரம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

News April 29, 2024

கோடை வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விலை உயர்வு

image

நாமக்கல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை உயர்வடைந்துள்ளது. எலுமிச்சை பழம் கடந்த வாரம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

News April 29, 2024

நாமக்கல்:ஆட்சியர் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., (28-04-2024) திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். முறையாக பாதுகாக்கப்படுகின்றதா பாதுகாப்பு பணி சிறப்பாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்

News April 28, 2024

நாமக்கல் பழக்கடைகளில் திடீர் சோதனை

image

நாமக்கல் மாவட்டத்தில், பல இடங்களில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருணன் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ப.வேலூரில் நடைபெறும், இன்று ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரசாயன பழங்களை அழித்தனர்.

News April 28, 2024

நாமக்கல்: கடும் வெயில்

image

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்றும், அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர், பரமத்தி, தருமபுரி, திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 9 இடங்களில் இன்று 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

News April 28, 2024

நாமக்கல்: பள்ளி கல்வி துறை ஆய்வாளர்கள் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று இராசிபுரம் சாந்தி இன் கிராண்ட் கோல்டன் காலில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் ஏற்பாட்டில் சிறப்புடன் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக காந்தியவாதி இரமேஷ் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டார்.

News April 28, 2024

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி விலை உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 92 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல் கறிக்கோழி கிலோ ரூ.119- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கிலோவுக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.122 ஆக அதிகரித்துள்ளது.

News April 27, 2024

ஸ்ரீ ராமர் கோவிலில் உழவாரப் பணி தொடக்கம்

image

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நாமக்கல், வலையபட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று இணைந்து உழவாரப் பணி மேற்கொண்டனர். இதன் முதல் தொடக்கமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!