India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. இப்பயிற்சியானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 முதல் நண்பகல் 1.30 மணி வரை நடைபெறும். பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் 04286-222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.06.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ் கண்ணன். தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள். பொதுமக்கள் காத்திருந்து தங்களின் மனுக்களை கொடுத்தனர்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்படி இன்று இரவு 7 மணி வரை நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகள் கனிஷ்கா. அரசு பள்ளி படித்து வந்த கனிஷ்கா இன்று வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சிறு வயது முதலே இருந்த இதய கோளாறு காரணமாக உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணின் வளத்தை அறிந்து கொள்வதற்கு வசதியாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கவிதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், வேளாண்மை துறை மூலம் தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் புல எண் வாரியாக மண்ணின் ஊட்டச்சத்து நிலை அதற்கு ஏற்ற உரம், மண்ணிற்கேற்ப பயிர்கள், பரிந்துரை செய்யப்படும். எனவே நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மோகனூர் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 28ஆம் தேதி வெள்ளிகிழமை காலை 10.00 மணிக்கு மல்லிகை சாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள தொடர்புக்கு 04286 – 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகவும்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை(ஜூன் 28) காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் முறைப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனிடையே நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மக்களுக்கு சேவையாற்றி வசதியாக செல்போன் 81110 01999 என்ற செல்போன் எண்ணையும் vsmatheswaranofficial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார். இது அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக மாதேஸ்வரன் பதவி ஏற்ற நிலையில், நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ் சந்தித்து வாழ்த்து கூறியனார். அதோடு போடிநாயக்கனூரில் இருந்து சென்னை செல்லும் துரந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுகோள் விடுத்தார். மேலும் கொல்லிமலை மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு 27 இடங்களில் செல்போன் டவர் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி கூறினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. ரிசர்வ் வங்கி பல்வேறு விளக்கங்கள் அளித்தும் நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
Sorry, no posts matched your criteria.