Namakkal

News July 6, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்கும் நோக்கில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் சுமார் 10491 கடைகளில் சோதனை செய்யப்பட்டு ரூ.13.81 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்கும் பட்சத்தில் ரூ.1,00,000 அபராதம் மற்றும் 90 நாட்களுக்கு கடைக்கான உரிமை ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ச.உமா இன்று தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

‘தமிழ் செம்மல்’ விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு

image

நாமக்கல் ஆட்சித்தலைவர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சி ஆர்வளர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரூ.25,000 தகுதியுரையும் வழங்குகிறது. 2024ம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு www.tamilvalarchidurai.tn.gov.in தளம் வாயிலாக ஆக.5க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 6, 2024

நாமக்கல் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

image

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜூலை 31 அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேனிலைப்பள்ளி கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா நேற்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

நாமக்கல்லில் 6 அரசுப் பள்ளிகளுக்கு விருது

image

பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான சத்துணவு வழங்கியமைக்காக, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பில்லூர், நெய்க்காரப்பட்டி, மணப்பள்ளி, கூனவேலம்பட்டி, அணைப்பாளையம், பரளி ஆகிய 6 பள்ளிகளுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள பள்ளிகளுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.

News July 5, 2024

துப்புரவு ஆணையத் தலைவர் ஆட்சியர் சந்திப்பு

image

நாமக்கல் வருகைதந்த தேசிய துப்புரவு ஆணைய தலைவர் வெங்கடேசனை பூங்கொத்து கொடுத்து ஆட்சியர் வரவேற்றார். தொடர்ந்து ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நாமக்கல் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் உட்பட பலர் இருந்தனர்.

News July 5, 2024

குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட 6,000 மனுக்கள்

image

நாமக்கல் அருகே அமைந்துள்ள வளையப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.இதனை எதிர்த்து சிப்காட் எதிர்ப்பு குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதுவும் பலன் அளிக்காததால்,இன்று காலை வளையப்பட்டி தபால் நிலையம் முன்பு சுமார் 6,000 மனுக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போராட்டத்தில் சிப்காட் எதிர்ப்பு குழுவினர் ஈடுபட்டனர்.

News July 4, 2024

தொற்றுநோய் அபாயம்: ஆட்சியா் எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய காரணத்தாலும் மற்றும் மாம்பழம் சீசன் தொடங்கிய காரணத்தாலும் ஈக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் ஆங்காங்கே மழை நீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும் .ஈக்கள் அதிகம் உற்பத்தி ஆனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவு.

News July 4, 2024

நாமக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் (இரவு 8.30 வரை ) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 4, 2024

எஸ்.பி தலைமையில் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் அவரது அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைந்து முடித்து வைக்கப்படும் என்று எஸ்.பி உறுதியளித்தார்.

News July 4, 2024

கடன் வழங்க ஏற்பாடு; நாமக்கல் ஆட்சியர் தகவல்

image

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்தோர் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக, சாத்தியக் கூறுகள் உள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன், குழுக் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருவதாகவும், இதை பயன்படுத்திக்கொள்ளவும் நாமக்கல் ஆட்சியர் உமா நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!