Namakkal

News November 27, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News November 27, 2024

சுதந்திர போராட்ட‌ வீரர்கள், வாரிசுதாரர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர் குறைதீர் கூட்டம் நாளை (28.11.2024) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில்  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

மத்திய அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

image

டெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேரில் சந்தித்தார். அப்போது, துறந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தும் கலந்துரையாடினார்.

News November 27, 2024

நாமக்கல்: 109 பணியிடங்களுக்கு 6832 பேர் விண்ணப்பம்

image

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் கட்டுநர்கள் பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி பெறப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 97 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 5,828 விண்ணப்பங்களும் மற்றும் 12 கட்டுநர் பணியிடங்களுக்கு 1,004 விண்ணப்பங்களும் பெறப்பட்டது.

News November 27, 2024

கறிக்கோழி கிலோவுக்கு ரூ.14 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.73-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.14 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.87 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.97 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

News November 27, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 32 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை ) 34 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 5 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 82.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 26, 2024

நாளை நாமக்கல் மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.1 மகரிஷி நகர் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.7 நல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News November 26, 2024

நாமக்கல்லில் முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 26 ஆம் தேதி நடைபெற்றது அந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.65 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் ரூ.5.65 என்ற விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து நீடிக்கிறது.

News November 26, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை
2.சென்றாயபெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை
3.போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது
4.தமிழ் புலிகள் கட்சியின் 17ம் ஆண்டு துவக்க நாள் விழா
5.நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் கூட்டம் நாலை நடைபெறுகிறது.

News November 26, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!