India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூகநலன் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2024ம் ஆண்டிற்கு பெண்களில் சிறந்த சாதனை புரிந்தோர்களுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் பெண்களில் சிறந்த சாதனை புரிந்த ஒருவருக்கு மாநில அளவில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. இதற்கு உரிய கருத்துரு வரவேற்கப்படுகிறது. மேலும், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும், உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது. தகுதியான நபர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் விவரங்களை கேட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வேளாண்மைத் துறையின் மூலம் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தின் கீழ், சிறந்த உயிர்ம வேளாண் விவசாயிக்கான “நம்மாழ்வார் விருது” மாநில அளவில் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வேளாண் துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்” என கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், ஒரே போலீஸ் ஸ்டேசனில், 3 ஆண்டுகள் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ.க்கள், போலீசார் மற்றும் விருப்ப மாறுதல் கேட்டவர்கள், புகாருக்கு உள்ளான நபர்கள் என 180 போலீசாரை ஒரே நாளில் இடமாற்றம் செய்து, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார் அதன்படி 33 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 18 பெண் போலீசார் உட்பட 180 போலீசார் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக அதிகரித்தது. நேற்று முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை விலை 520 காசுகளாக நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.15 லட்சம் வரை கடன் பெற தனி நபர்கள் மற்றும் சுயஉதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம். இதற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த 18-60 வயதுக்கு உட்பட்டவர்கள் <
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.118-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
செங்கல்பட்டில் அகில இந்திய மகளீர் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 4 நாட்களாக நடந்தது. இதில் நாமக்கல் ஆயுதப்படை பெண் போலீஸ் கீதா பங்கேற்று 4 வகையான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று ஒட்டு மொத்த முதல் பரிசை வென்று சாதனை படைத்தார்.இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஆயுதப்படை போலீஸ் கீதாவை நாமக்கல்லில் இன்று நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, குட்டை உள்ளிட்ட 116 நீர் நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட தலைவராக திருச்செங்கோட்டை சேர்ந்த ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து முன்னணி இயக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக களப்பணி ஆற்றி வரும் ரமேஷ் கிளை, நகரம், ஒன்றிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, அவருக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.