Namakkal

News April 25, 2024

நாமக்கல்: காசோலை வழங்கிய ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம், வேலவன் நகர், காட்டூர், காட்டுக் கொட்டாய் பகுதியில் தேர்தல் பணியின் போது இறந்த ஜெயபாலன் வாரிசுதாரர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கருணைத் தொகையாக ரூ.15,00,000/- க்கான காசோலையினை வழங்கினார். அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 25, 2024

நாமக்கல் 2024-2025 கூட்டுறவு பயிற்சி

image

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நடைபெற்று வருகிறது. துவங்குகிறது. இந்த ஆண்டிற்கான, மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வருகின்ற 29ம் தேதி முதல் முன்பதிவு துவங்குகிறது. வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

News April 25, 2024

நாமக்கல்: வரும் 30ல் இலவச பயிற்சி

image

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு, கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறுகிறது கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்கிற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

News April 25, 2024

நாமக்கல்: ஆண் சடலம் மீட்பு!

image

குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய காவேரி பாலம் அடியில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக இன்று காலை குமாரபாளையம் பொதுமக்கள் காவல்துறையினரிடம் தகவல் கூறினர். இது குறித்து வி.ஏ.ஒ. முருகன் கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி யார்? எந்த ஊர்? என்ற விபரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 25, 2024

நாமக்கலின் தனித்துவமான வளைவுகள்!!

image

1300 மீ உயரமும், 300 கிமீ நீளமும் கொண்ட கொல்லிமலை, 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான இந்த வளைவுகள் 46.7 கிமீ நீளம் கொண்டவை. இந்தியாவின் நீண்ட கொண்டைஊசி வளைவு சாலை இதுவே. மலையின் உச்சியில் ஆகாய கங்கை அருவியும், சிவன் கோவிலும் உள்ளது. இந்த வளைவினாலேயே இம்மலை, ‘மரணத்தின் மலை’ என்றொரு பெயரும் பெற்றுள்ளது. வாகனம் ஓட்டுவதை நேசிப்பவர்களுக்கு ஏற்ற சாலையாகவும் உள்ளது.

News April 25, 2024

நாமக்கல் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 27 முதல் மே 8 வரை நீச்சல் தெரிந்தவர்களுக்கு காலை 9 முதல் மாலை 5 வரை 1 மணி நேரத்திற்கு 1 நபருக்கு ரூ.59 செலுத்தி நீந்தலாம்.
மேலும் விபரங்களுக்கு பயிற்சியாளர் சிங்குதுரையை  8508641786 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

News April 25, 2024

நாமக்கல்: கல்லூரியில் கல்லூரி கனவு குறித்த கருத்தரங்கு

image

ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கான என் கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி, நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தனி தாசில்தார் பிரகாஷ் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராஜா ஜெகஜீவன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர்.

News April 25, 2024

நாமக்கல்: போதிய தண்ணீர் அருந்துங்கள் ஆட்சியர் தகவல்

image

வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 24.4.24 ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும்,தேவையின்றி மதியம் 12-3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்து வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படுமாயின் மருத்துவரை அணுகுமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

பேருந்துகளை சிறை பிடித்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது

image

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்செங்கோடு சாலையில் 50 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக கனரக வாகனங்கள் செல்வதற்கு அறிவிப்பு வராத நிலையில், இரவு நேரத்தில் விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்ததால், பொதுமக்கள் நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்றை சிறை பிடித்தனர்.

News April 24, 2024

நாமக்கல்: போக்குவரத்து துறை உத்தரவு

image

நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர் கேட் பகுதியில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வாகனங்கள் நிற்பதில்லை என புகார் எழுந்த நிலையில், தற்போது ஆட்டையாம்பட்டி பிரிவில் நிறுத்தி செல்வதற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!