India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.திருச்செங்கோட்டில் பேருந்து மீது டூவிலர் மோதி விபத்து
2.பெங்கல் புயல் மழை வெண்ணெய் காப்பு ரத்து
3.பேட்டரி ஸ்பிரேயர் மானிய விலையில் வழங்கல்
4.நாமக்கல் அருகே விபத்து: 3 பேர் பலி
5.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ரவிச்சந்திரன் (9498169276) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 1 ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.80 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக இன்று 1ந் தேதி 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் நகரின் மத்தியில் இரு கைகளை கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் நவம்பர் டிசம்பர் ஜனவரி ஆகிய 3 மாதம் பக்தர்களின் பங்களிப்போடு வெண்ணெய் காப்பு நடைபெறும். இன்று டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த வெண்ணெய் காப்பு, பெஞ்சல் புயல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தின் தரப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்திகை மாத ஞாயிற்றுக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடை பயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதி, 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார். உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்ததுடன் விபத்துக்கான காரணங்களை காவல் துறையிடம் கேட்டறிந்தார்.

ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு கரையை கடந்து, தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழையா? கமெண்ட் பண்ணுங்க.

1. நாமக்கல் மாவட்டத்தில் இன்று அமாவாசையை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
2.நாமக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
3.பள்ளிபாளையம்: சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் கழிவுநீர்
4.திருச்செங்கோடு: ரூ.1.24 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
5.ராசிபுரத்தில் பட்டுக்கூடு ரூ.82,000க்கு விற்பனை
6.சிறுமிக்கு பாலியல் தொல்லை: 10 ஆண்டு சிறை

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – ஆகாஷ் ஜோசி (9711043610), ராசிபுரம் விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு -இமயவரம்பன் (9498230141), வேலூர்- சங்கீதா (9498210145) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 12 மி.மீ., நாளை 54 மி.மீ., நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 78 மி.மீரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் 3ஆம் தேதி 28 மி.மீரும், 4ஆம் தேதி 30 மி.மீரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.