Namakkal

News April 26, 2024

நாமக்கல் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

நாமக்கல் நகராட்சியில் 19 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 நபருக்கு 135 லி. குடிநீர் வழங்கப்படும் நிலையில், கோடை வெப்பம் காரணமாக காவிரி ஆற்றில் குடிநீர் குறைந்து வருகிறது. குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் கொண்டு உறிஞ்சி எடுத்தால் அபராதம் விதிப்பதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் நேற்று(ஏப்.25) எச்சரித்துள்ளார்.

News April 26, 2024

ராசிபுரத்தில் நீர், மோர் வழங்கல்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சித்திரை தேர் விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்ட நிகழ்வில் கடும் வெயிலிலும் பக்தியுடன் பங்கேற்ற அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ராசிபுரம் பெரிய பள்ளிவாசல் ஜாமியா மஸ்ஜித் சார்பில் நீர் மோர் வழங்கினர். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம் என்ற மனிதநேயம் காணப்பட்டது.

News April 25, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட்

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வெப்ப அலை வீசி வருவதால் (மஞ்சள்)அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் அதிக நீர்ச்சத்துள்ள பழவகைகள் உண்ண வேண்டும் இன்று நாமக்கல் மாவட்டம் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 25, 2024

நாமக்கல்: சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

image

ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் வீசாணம் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து உள்ளார். மயக்கத்தில் இருந்த சிறுமியை மீட்ட பெற்றோர்கள் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

News April 25, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற சுதந்திர தினத்தன்று சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தகுதியான நபர்கள் அரசின் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

நாமக்கல் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் நாமக்கல் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

நாமக்கல் அருகே விபரீத முடிவு

image

எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார்.கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார்.மனவேதனையடைந்த ரவி,நேற்று முன்தினம் இரவு, தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.

News April 25, 2024

நாமக்கல் அருகே விபரீத முடிவு

image

எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார்.கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார்.மனவேதனையடைந்த ரவி,நேற்று முன்தினம் இரவு, தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.

News April 25, 2024

நாமக்கல்: வெள்ளி கவசத்தில் அங்காள பரமேஸ்வரி

image

எருமபட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் மகா தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

News April 25, 2024

நாமக்கல்: குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!