India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 24 ஆம் தேி காலை 10 மணிக்கு “திலேப்பியா மீன் வளர்ப்பு” குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊராக மகளிர் மற்றுமம் இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். மேலும், பயிற்சிக்கு முன் பதிவு கட்டாயம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் இன்று தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தங்களது பெயர் பலகையை தமிழில் வைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து கூறினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், வெள்ளையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கர்நாடகா, உத்தரகன்னடாவில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில், டேங்கர் லாரியுடன் சிக்கிய நாமக்கல், ராசிப்புரத்தை முருகன் மற்றும் சின்னண்ணண் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து இருவரின் உடலும் மீட்கப்பட்டது. மேலும், இவர்களுடன் தருமபுரியை சேர்ந்த மற்றொரு முருகனும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சத்திரத்தில் 1.20 மி.மீ மழை, ராசிபுரத்தில் 2 மி.மீ, சேந்தமங்கலத்தில் 1.00 மி.மீ திருச்செங்கோட்டில் 2.00 மி.மீ, கொல்லிமலை செம்மேட்டில் 3.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ அல்லது -1 ஆகிய தளங்களில் விண்ணப்பிக்கலாம் நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நாமக்கல் வேளாண் இணை இயக்குநர் கவிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ நாமக்கல் விவசாயிகள் தற்போது நிலக்கடலை சாகுபடியை தொடங்கியுள்ளனர். இதற்கு பயன்படும் டி.ஏ.பி உரத்தின் மூலப்பொருட்களின் விலை, உலக சந்தையில் அதிகம் உள்ளதால், அதன் உற்பத்தி போதிய அளவில் இல்லை. இதற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தினால் செலவை குறைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் கடும் வெப்பம் நிலவுவதால் முட்டை நுகர்வு குறைந்துள்ளது. அதனால் நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சரிந்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகள் மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் நாள்தோறும் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அவை பாதிக்கப்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 19.07.24 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.