Namakkal

News July 21, 2024

நாமக்கல் முட்டை மற்றும் கோழி நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதே விலையில் விற்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.117-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News July 21, 2024

பண்ணையாளருக்கு ஒரு நாள் பயிற்சி

image

நாமக்கல் நாட்டு கோழி பண்ணையாளர்களுக்கு வரும் 25ல் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது. நாட்டு கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 04286 233230 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News July 21, 2024

சிப்காட் தொழிற்பூங்கா பணியாளர்கள் நியமனம்

image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களில் 195 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா நிலத் தேர்வு பணிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நில எடுப்பு பணிக்காக 19 பணியாளர்களையும் அரசு நியமித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்பணியானது நடந்து வருகிரது

News July 20, 2024

மத்திய அரசின் பிரிண்டிங் & டிசைனிங் கோர்ஸ் தொடக்கம்

image

திருச்செங்கோடு வட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள அனுபி டிசைனிங்க் இன்சுட்யூட் & ஜே.எஸ்.எஸ் மக்கள் கல்வி மத்திய அரசின் நிறுவனம் இணைந்து நடத்தும் டெக்ஸ்டைல் பிரின்டிங் மற்றும் பெயின்டிங் கோர்ஸ் இன்று(ஜூலை 20) தொடங்கியது. இதில் ஆண்கள், பெண்கள் என 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்கப்படும். மேலும், கோபிநாத் ஜே.எஸ்.எஸ்.டைரக்டர் சரவணன் கலந்துகொண்டார்.

News July 20, 2024

34 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை

image

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், செங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை எம்பி ராஜேஸ்குமார் வழங்கினார். உடன் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர்கள் செந்தில்முருகன், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிகள் கலந்துகொண்டனர்.

News July 20, 2024

ஏலத்திற்கு அழைப்பு விடுத்த ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாமக்கல் மாவட்ட அலகில் செயல்பாட்டில் இருந்த TN 28G 6699, TN 28 G 7799, TN 28G 0194, TN 28G 0222 ஆகிய வாகனங்கள் வரும் ஆகஸ்ட்.20 அன்று ஏலம் விடப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த மேலும், விவரங்களுக்கு 9445008144 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 20, 2024

வனச்சரகம் சார்பில் இலவச மரக்கன்றுகள்: ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் கீழ்காணும் வனச்சரகங்களில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் தேவைப்படுவோர் உரிய ஆவணங்கள் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். அதன்படி, இராசிபுரம்-8883985972, நாமக்கல்-9942062486, சேந்தமங்கலம்-9344364987, பரமத்திவேலூர்-9842702859, கொல்லிமலை-8870114906, குமாரபாளையம்-7550195814, மோகனூர்-9942062486 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மரங்களை பெறலாம்.

News July 20, 2024

நாமக்கல் கவிஞரின் வெள்ளிப்பேழை நன்கொடையாக ஒப்படைப்பு

image

இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி அறியும் வகையில் சென்னை ஹுமாயூன் மஹாலில் 8000 ச.அடியில் பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்துக்கு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களுக்கு 1945ல் வழங்கப்பட்ட வெள்ளிப்பேழை , வாழ்த்துப்பட்டயத்தை அவரது பேரன் முனைவர். பழனியப்பன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் அவர்களை சந்தித்து நன்கொடையாக ஒப்படைத்தார்.

News July 19, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

எம்பியிடம் மனு வழங்கிய விவசாயிகள்

image

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனை ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினர். அதில் விவசாயத்திற்கு தனி யூனியன் பட்ஜெட் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உள்ளிட்ட, விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளை, பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!