India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் அருகே ராசிபுரத்தில் 2 சிறுமிகளை ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சங்கர் என்கிற சிவா, வரதராஜ் ஆகிய இருவருக்கும் தலா 4 ஆயிரம் அபராதமும் 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் உத்தரவு இன்று பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்-க்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பெட்டி மின்னணு இயந்திரங்களை நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா இன்று திருச்செங்கோடு வட்டம், எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்செங்கோட்டில் சங்கத்தின் மாநில தலைவர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் பாருக் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட
6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றி வாக்குகள் எண்ணும் பணி முடியும் வரை டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளார்.
நாமக்கல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை உயர்வடைந்துள்ளது. எலுமிச்சை பழம் கடந்த வாரம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
நாமக்கல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை உயர்வடைந்துள்ளது. எலுமிச்சை பழம் கடந்த வாரம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., (28-04-2024) திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். முறையாக பாதுகாக்கப்படுகின்றதா பாதுகாப்பு பணி சிறப்பாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்
நாமக்கல் மாவட்டத்தில், பல இடங்களில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருணன் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ப.வேலூரில் நடைபெறும், இன்று ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரசாயன பழங்களை அழித்தனர்.
தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்றும், அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர், பரமத்தி, தருமபுரி, திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 9 இடங்களில் இன்று 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.