Namakkal

News May 3, 2024

நாமக்கல்லில் நடமாடும் மண் பரிசோதனை முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் மே 9ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. அந்த வகையில், முகாமானது, 9ஆம் தேதி மல்லசமுத்திரம் ஒன்றியம் செண்பகமாதேவி, 16ஆம் தேதி வெண்ணந்தூா் ஒன்றியம் அக்கரைப்பட்டி, 23ஆம் தேதி சேந்தமங்கலம் ஒன்றியம் பள்ளம்பாறை, 30ஆம் தேதி கபிலா்மலை ஒன்றியம் இருக்கூா் ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களின் மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையலாம்.

News May 3, 2024

நாமக்கல் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நேற்று(மே 2) மாவட்ட கூட்டரங்கில் முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தில் வளர்ந்துவரும் தொழில்துறையில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது எப்படி, இலவச திறன் பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

News May 2, 2024

நாமக்கல்: பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்

image

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று மாலை மாவட்ட அளவிலான தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.தொடர்ந்து கோடை வெயிலால் மாவட்டத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக தீ விபத்தும் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

News May 2, 2024

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

image

நாமக்கல் மாவட்ட கல்வி பொறுப்பு அலுவலராக மரகதம் இன்று நாமக்கலில் தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் மரகதத்திற்கு நாமக்கல்லைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் தன்னார்வலரும் பசுமை தில்லை சிவக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள் பலர் உடனிருந்தனர்.

News May 2, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ,வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

நாமக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கலுக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 2, 2024

நாமக்கல்: மே தின நிகழ்ச்சிகள் தொழிலாளர்கள் பங்கேற்பு

image

நாமக்கல், திருச்செங்கோட்டில் மே தின ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. மே தின ஊர்வலத்தில் பங்கேற்ற விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பேசினர். நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

நாமக்கல் அர்த்தநாதீஸ்வரர் கோவில் சிறப்பு!

image

நாமக்கல், திருச்சங்கோடு அர்த்தநாதீஸ்வரர் கோவில், கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள 7 சிவ தலங்களுள் ஒன்றாகும். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில் சிவன், பாதி பெண்ணாகவும், மீதி பாதி ஆணாகவும் இருக்கும் அர்த்தநாதியாக காட்சியளிக்கிறார். 1200 படிகள் கொண்ட இத்தலத்தில் சம்பந்தர் தேவாரம் பாடியுள்ளார். மிகவும் தொண்மையான இக்கோவில் அமைந்துள்ள திருச்செங்கோட்டின் புராண பெயர் திருக்கொடிமடச்செங்கோண்டுரூர் ஆகும்.

News May 2, 2024

திருச்செங்கோடு அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

திருச்செங்கோடு அருகே உள்ள பணங்காட்டுபாளையம் என்ற இடத்தில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 7 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தங்கராஜ்(38)என்பவரை போலீசார் கைது செய்தனர்

News May 1, 2024

சிறப்பு அலங்காரத்தில் நஞ்சுண்டேஸ்வரர்

image

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஏரிக்கரை அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மையார் உடனுறை ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. 34 ஆவது நாள் மண்டல அபிஷேக பூஜையில் மூலவர் ஸ்ரீ பார்வதி அம்மையார் மற்றும் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

error: Content is protected !!