India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ஆக.1,2,3 ஆகிய மூன்று நாட்களுக்கு, செம்மேடு, சோளக்காடு, செங்கரை ,காரவள்ளி ஆகிய நான்கு இடங்களில் உள்ள அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ள, அணிச்சம்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் நாமக்கல் ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டால், காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை, ஏற்பாடுகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வந்ததையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் நகர சுகாதார நிலையம் (தாலுக்கா மருத்துவமனை) ஓரிரு நாட்களில் செயல்பட உள்ளது. மேலும் அரசு மருத்துவமனை நகர்ப்புற சுகாதார மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும். இதில் ரூ.1 கோடியில் 60 படுகைகள் கொண்ட சித்த மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும் என்று எம்.பி. ராஜேஷ்குமார் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேட்டூர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடும் காரணத்தால் கரையோரப் பகுதியில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மேலும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கவோ அல்லது படகில் சென்று மீன் பிடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேற்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 23 எஸ்.ஐ.கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நாமக்கல்லில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய தலைமை அரசு மருத்துவமனையில் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி 9 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வயது 19 குறையாமல் இருக்க வேண்டும். இதில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு மாத சம்பளம் 16 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து நேர்முகத் தேர்வில் எழுதி பயனடைய தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய தலைமை அரசு மருத்துவமனையில் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி 9 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வயது 19 குறையாமல் இருக்க வேண்டும். இதில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு மாத சம்பளம் 16 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து நேர்முகத் தேர்வில் எழுதி பயனடைய தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள, பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரைவில, புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையமாக, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை 100 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதை அடுத்து இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட உள்ளதால், காவிரி கரையோரப் பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் காவேரி நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
இன்று அத்தனூர் பேரூராட்சி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையும், புதிய 7 புறநகர் பேருந்துகள் மற்றும் 3 புதிய நகர்புற பேருத்துகள் என மொத்தம் 10 புதிய வழித்தட பேருத்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார், முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.