Namakkal

News May 13, 2024

நாமக்கல்: பீன்ஸ் விலை உயர்வு

image

நாமக்கல்லில் பீன்ஸ் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் பகுதியில் கடந்த வாரம் பீன்ஸ் கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் வரத்து குறைந்து வருவதை விலை அதிகரிக்க காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். பீன்ஸ் விலை உயர்த்தியுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 13, 2024

நாமக்கல்லில் கனமழை வாய்ப்பு!

image

தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News May 13, 2024

நாமக்கல்: ரூ.10.30 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

image

நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் வார இறுதி நாட்களில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். அந்த வகையில் நேற்று 20 டன் காய்கறிகள் மற்றும் 4.75 டன் பழங்கள் என மொத்தம் 24.75 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 4,230 பேர் வாங்கி சென்றனர்.

News May 13, 2024

நாமக்கல்: சரக்கு ரயிலில் 2700 ரேஷன் அரிசி வருகை

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வாங்கி வரப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,700 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் நாமக்கல் கொண்டுவரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் நாமக்கல் ரயில் நிலையத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News May 12, 2024

நாமக்கல்லில் பக்தர்கள் தரிசனம்

image

உலக புகழ் பெற்ற நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பின்னர் 1008 வடை மாலை சாத்திய பிறகு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம் தேன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மகா தீபம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

News May 12, 2024

நாமக்கல்: ஆஞ்சநேயர் தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

image

நாமக்கல் நகரில் அமைந்துள்ள 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சாமி இது கைகளை நாமகிரி தாயாரையும், நரசிம்மர் பெருமாளும்,வங்கியாகும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆஞ்சநேயர் சாமிக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று தங்க கிரீடத்துடன் தங்க காப்பு அலங்காரம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

News May 12, 2024

நாமக்கல்:வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்டம்,மோகனூர், பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் மோகனூர்-வளையப்பட்டி வரை தார்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

News May 11, 2024

திருச்செங்கோட்டில் மஞ்சள் டெண்டர் அமோகம்

image

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் இன்று மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரூ.16330 முதல் ரூ.18833 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.15058 முதல் ரூ.17199 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ.19482 முதல் ரூ. 26569 வரையிலும் மொத்தம் 1800 மூட்டைகள் தொகை ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது.

News May 11, 2024

நாமக்கல்: முட்டை விலை 10 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் 535 காசுகளுக்கு கோழி பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டல கோழி பண்ணைகளில் இன்று(மே 11) 545 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளது. வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!