India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொ) ஜி.பரிமளா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழைக் காலங்களில் மின் சாதனங்களைப் பயன்படுத்தும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் குறிப்பாக மின்சாதனங்கள் அருகில் செல்லும் சிறுவர்களை கண்காணிக்க வேண்டும் அலட்சியமாக செயல்படக் கூடாது. குறிப்பாக, வீடுகளில் பழுதான மின்சார பொருள்கள் இருந்தால் உடனடியாக மாற்றி விட வேண்டும் என கூறியுள்ளார்
தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.அந்த வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.141-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.144 ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 580 காசுகளாகவும், முட்டை கோழி விலை ரூ.103 ஆகவும் உள்ளது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று மே 19-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நாமக்கல்லில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. எனவே கொல்லிமலை சுற்றுலா பகுதிகளில் உள்ள அருவிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் அளவைப் பொறுத்து மறு அறிவிப்பு வெளியாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத் தாளாளர் இல்லம் அவரது மருமகன் வீடு அவருடைய தொடர்புள்ள வீடுகளில் சோதனை நடைபெறுவதால் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மே மாதத்தில் 15 நாட்களில் 136 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளாகியுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் டெங்கு மதிப்பில் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று அறிவுறுத்தி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் வரும் நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் 5 வருட காலத்திற்கு பெறப்படும் வட்டியில்லா கடன் தொகையினை திருப்பி செலுத்தி பயன்பெறலாம். இத்திட்டம் குறித்த தகவல்களுக்கு நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அறை எண்:06 தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது தொலைபேசி எண்:04286-280019 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு ச.உமா நேற்று தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வேலை செய்ய விருப்பமுள்ள செவிலியர்களுக்கு அயல் நாட்டு மொழிகளான ஜெர்மன், ஜப்பான் போன்ற மொழிகளை இலவசமாக பயிற்சி அளிப்பது குறித்த, தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சி குறித்த சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் (63791 79200) மற்றும் அலுவலக தொலைபேசி எண்களில் 044-22502267, 22505886 தொடர்புகொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.