India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை சனிக்கிழமை காலை சங்ககிரியில், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, குமாரபாளையத்தில் காவிரி கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து, ஆறுதல் கூற உள்ளார். முன்னேற்பாடு பணிகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
பரமத்தி வேலூர் மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று , நாமக்கல் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் ., முன்னிலையில் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டனர். உடன் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 2, 3) வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தகவலை நாமக்கல் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் லட்சுமி நாராயணபெருமாள் கோயில், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில், வேலூர் காசி விஸ்வநாதர் கோயில், ஐமீன் இளம்பள்ளி உமா மகேஸ்வரர் கோயில், கொத்தமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோயில், தேவராயசமுத்திரம் காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய கோயில்களில் எதிர்வரும் 3ந் தேதி ஆடி18 மற்றும் 4ந் தேதி ஆடி 19 அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் இறங்கி புனிதநீராட ஆட்சியர் உமா தடை விதித்துள்ளார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டதில் 25 தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேர்காணலை நாமக்கல் மாவட்டம் மேலாளர் சின்னமணி மற்றும் வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் தலைமையில் சேலம் மாவட்டம் மேலாளர் மனோஜ் முன்னிலையில் சேலம் மண்டல மேலாளர் அறிவுகரசு நடத்தினார்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முன்னாள் நாமக்கல் மாவட்ட ஆட்சியருமான ஆசியா மரியம், இன்று குமாரபாளையம் நகராட்சி, காவேரி நகர் தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பம்பு செட் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் நாமக்கல் வசந்தபுரம் மற்றும் திருச்செங்கோடு வரகூராம்பட்டியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு நாமக்கல் கலெக்டர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கான நேர்காணல் இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலை சேலம் மண்டல மேலாளர் அறிவுகரசு நடத்தினார். இதில் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் உதவியாளர்களின் பிளஸ் டூ சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்த நேர்காணலில் தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துள்ளனர்.
10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சூரியம்பாளையம், “செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து திருமண மண்டபத்தில்” சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. ஆகவே பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பதிவு கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று ஒரு நாள் மட்டும் பயிர் காப்பீடு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.