India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று (25.5.2024) நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்கள் அதைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து நகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் மூன்று நாள்கள் பல்வேறு கடைகளில் தொடா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நாமக்கல்லில் உள்ள கடைகளில் 102 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.144-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.147 ஆக ஆனது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.103- ஆகவும், மேலும் முட்டை கொள்முதல் விலை 580 காசுகளாகவும் இருந்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல்லில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் இன்று (24.05.2024) மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடஉள்ள அலுவலர்களுக்கு கணிணி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்ட பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக 23ஆம் தேதி பதிவான மழை அளவு விவரம் வருமாறு: – பரமத்தி வேலூர் 0.7மி.மீ, அதேபோல் கொல்லிமலை வட்டத்தில் கொல்லிமலை செம்மேட்டில் 10 மி.மீ மழை என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 10.07 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 24ந் தேதி 18 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 91.4 டிகிரியாகவும் குறைந்தபட்சம் 73.4 டிகிரியாகவும் இருக்கும்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டமானது நிர்வாகி ரமேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மற்றும் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி உறையூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் கனிஷ்கா (19). இவர் நாமக்கல்லை அடுத்த சின்ன முதலைப் பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இன்று திருவிழாவிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கனிஷ்கா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.