India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல், முத்துகாப்பட்டி கிராமத்திற்கு அருகில் உள்ளது தத்தகிரி முருகன் கோயில். இந்த கோயில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. சன்னியாசி கரடு என்று அழைக்கப்பட்ட இந்த கோயிலில், பல சித்தர்கள் தவமிருந்தாக கூறப்படுகிறது. பழமையான கோவிலான, இங்கு சுயம்பிரகாச அவதூத சரஸ்வதி சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துள்ளார்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.2024-2025ம் ஆண்டிற்கான இக்கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தரவரிசை அடிப்படையில் மின்னஞ்சல் வாட்ஸ்அப் கைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தரவரிசை பட்டியல் aagacnkl.edu.in என்ற கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கத்தின் வெள்ளி விழா டிரினிட்டி சிபிஎஸ்இ கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பசுமை தமிழக மக்கள் இயக்கத்துடன் இணைந்து உலக சுற்றுசூழல் தினத்தன்று மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி வரும் 05.06.24, புதன்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி நாமக்கல் டிரினிட்டி இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
நாமக்கல் பழங்குடியினர் நல கல்வி உதவித்தொகை மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 24-25ம் ஆண்டிற்கான முதுநிலை முனைவர் ஆராய்ச்சியின்படி, உயர் படிப்பை வெளி நாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. https://overseas.tribal.gov. in/என்ற இணையதளத்தில் 31.05.24 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர்.எனவே முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் முட்டை விலை 40 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சேந்தமங்கலம் அரசு கலை கல்லூரியில் 2024-25 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி 30-ம் தேதி வரை சேர்க்கை நடைபெறுகிறது. முதலாம் கட்ட மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும், 2-ஆம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது
இந்திய விமானப்படையால் அக்னிவீர் வாயு இசை கலைஞர் தேர்விற்கு பெங்களூரில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.24 முதல் 12.07.24 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்கு திருமணமாகாத விருப்பமுள்ள ஆண்/பெண் 05.06.24 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.https//agnipathvavu.cdac.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் 25 சதவீத ஒதுக்கீட்டில் புகாா்கள் எழாதவாறு தனியாா் பள்ளிகள் செயல்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) விஜயன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், 25 சதவீத ஒதுக்கீட்டை தனியாா் பள்ளிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் சேந்தமங்கலம் – இராசிபுரம் சாலையில் கிரசர் நிறுவனங்களின் சரக்குந்து வாகனங்களில் அதிக பாரத்துடன் கொள் அளவுக்கு மேல் எடுத்து செல்வதால் சாலையில் சிதறி விபத்துகள், சாலையின் மேல்தளம் மற்றும் சாலை உபகரணங்கள் சேதமடைவது தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் மாண்புமிகு இந்திய தேர்தல் ஆணையர்கள் கணேஷ் குமார் சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா காணொளி வாயிலாக கலந்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.