Namakkal

News May 31, 2024

நாமக்கல்லில் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 4 ம் தேதி விவேகானந்தா கலை மற்றும் கல்லூரி வளாகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அன்று வாக்குகள் என்ன இருக்கின்றது. அதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் வெளிநாட்டு மதுபான கடைகள், மதுபான பார்கள் ஆகியவை திறக்க கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

நாமக்கல்லில் தரமற்ற அரசு பேருந்துகள்

image

நாமக்கல்லில் பதிவுச் சான்று ரத்தான தரமற்ற அரசு பேருந்துகளை இயக்குவது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.அந்த வகையில் தி.கோடு நகரில் ஓடும் 12 அரசுப் பேருந்துகளின் பதிவுச் சான்று ரத்தான நிலையில் இயக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவுச் சான்று ரத்தான அரசுப்பேருந்துகளை செப்.30 வரை இயக்க கால நீட்டிப்பு உள்ளது என அதிகாரிகள் இதுதொடார்பாக இன்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

News May 31, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, இன்று வெள்ளிக்கிழமை (31.5.2024) பரமத்தி வேலூர், வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கபிலர்மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். இந்த, ஆய்வின் போது சம்பந்தப்பட்ட , மருத்துவ துறை அதிகாரிகள், பலர் உடன் இருந்தனர்.

News May 31, 2024

நாமக்கல்: செல்போன் பயன்படுத்த கூடாது

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற 4 ம் தேதி வாக்கு என்னும் மையத்தில் செய்தியாளர்கள் கேமராவை பயன்படுத்த வேண்டும் செல்போன் பயன்படுத்த கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் கட்டாயம் தேர்தல் அலுவலர் வழங்கப்பட்டுள்ள ஐடி கார்டுகளை பயன்படுத்த வேண்டும். செய்தியாளர்கள் அறையில் செல்போன் லேப்டாப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News May 31, 2024

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் சிறப்பு!

image

நாமக்கல்லில் நரசிம்மர் சுவாமி கோயில், 200 அடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ளது. மலையின் கீழ், ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையில் வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் உள்ளது. இங்கு 18 அடி உயரமுள்ள அனுமன் சிலை உள்ளது. குடைவரையாக உள்ள இக்கோயில், 1300 ஆண்டுகளுக்கு முன் மகேந்திரவர்மன் அமைத்தவை. இக்கோயில் பல புராணக்கதைகளைக் கொண்டு விளங்குகிறது.

News May 31, 2024

நாமக்கல்லில் ஜீன் 5 ல் ஓவியப் போட்டி

image

நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கத்தின் வெள்ளி விழா டிரினிட்டி சிபிஎஸ்இ கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பசுமை தமிழக மக்கள் இயக்கத்துடன் இணைந்து உலக சுற்றுசூழல் தினத்தன்று மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி
வரும் 05.06.24 காலை 9 மணி முதல் 12 மணி வரை நாமக்கல் டிரினிட்டி இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது

News May 31, 2024

நாமக்கல் முட்டை விலை ரூ 5.30 ஆக நிர்ணயம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 26ம் தேதி ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.60 ஆனது. 27, 28ம் தேதிகளில் தலா 20 பைசா குறைந்து ரூ. 5.20 ஆனது. 29ம் தேதி முட்டை மீண்டும் 5 பைசா உயர்ந்து5. 25க்கும் நேற்று 5 பைசா உயர்ந்து 5.30க்கு விற்கபடுகிறது.

News May 31, 2024

நாமக்கல்: தீயணைப்பு செயல் விளக்கம்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்லைக் குட்பட்ட மாணிக்கம் மருத்துவமனை ராசிபுரத்தில் மருத்துவர்கள் விஜயகுமார் கோகிலவாணி ஆகியோர் தலைமையில் செவிலியர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தீ பாதுகாப்பு தீயின் வகைகள் என்னென்ன தீயின் தன்மை கேற்ப தீயை எவ்வாறு எளிய முறையில்
அணைக்கவேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது

News May 31, 2024

தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பம்

image

2024- 2025 ஆம் ஆண்டிற்கான அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட  www.skilltraining.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோர் கல்வி சான்று , சாதி சான்று, மாற்றுச் சான்று, ஆதார் அட்டை , புகைப்படங்களை கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

சிப்காடிற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

image

மோகனூர் வட்டம் வளையப்பட்டி பரளி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்து வருவதை தடுத்து சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி 21 வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் வளையப்பட்டி சிப்காட் எதிர்ப்பு இயக்க அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது இதில் பொதுமக்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் பல்வேறுக் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்

error: Content is protected !!