India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அரசபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்துள்ளது. திடீரென கூடு கலைந்ததால் , தேனீக்கள் சாலையில் சென்ற நபர்கள், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நபர்களை கொட்டியது. இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் தன்னார்வலர் அமைப்பானது, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு, SRPO நிறுவனர் /தலைவர் P.வடிவேல் அவர்கள் மரக்கன்றுகள் வழங்கினார். நாமக்கல் மண்டல செயலாளர் S. நடராஜ், மண்டல பொறுப்பாளர் V. பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை பணியில், தலா 17 தேர்தல் நுண்பார்வையாளர்கள், 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் என மொத்தம் ஒரு சட்டசபை தொகுதிக்கு 51 பணியாளர்கள் வீதம் 102 தேர்தல் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு தயார்.
ஜூன் 10ம் தேதி முதல் அரசு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ,பள்ளி செல்வதற்கு மாணவ மாணவியர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிபாளையம் பெண்கள் பள்ளி அருகே செயல்படும் , சைக்கிள் கடைகளில் அரசு பள்ளி மாணவ மாணவியர் பயன்படுத்தி வரும், விலையில்லா சைக்கிள்களை பழுது நீக்கி தர கோரி சைக்கிள்களை கொடுத்து வருகின்றனர்.
இராசிபுரம் அடுத்துள்ள இராசிபுரம்சேலம் செல்லும் சாலையில் உள்ள அகரம் மகாலட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகின்றது.இதில் கற்களை வெட்டி எடுக்க வெடிபொருட்களை பயன்படுத்தி 24மணிநேரமும் வெடிசத்தமாய் கேட்டுக்கொண்டுள்ளது.இதனால் அருகில் வசிக்கும் மக்கள் பெரிதும் அச்சத்துடனே வாழ்ந்துவருகின்றனர்.இதனை முறைப்படுத்த வேண்டும் என தமிழக தன்னுரிமைகட்சி நிறுவனர் நல்வினைசெல்வன் இன்று அறிக்கை
நாமக்கல்லில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராசிபுரம் பகுதியில் 3 செ.மீட்டரும், புதுச்சத்திரம், ராசிபுரம் ARG ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 530 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்,அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.எனவே முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக உயர்வடைந்துள்ளது.மேலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி ரூ.98-க்கும்,கறிக்கோழி (உயிருடன்) கிலோ ரூ.140-க்கும் விற்பனையாகிறது.அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் இனி வரும் நாள்களில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 98.6 டிகிரியாகவும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கில் இருந்து மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 9 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 174 மையங்களில் 51,433 போ் எழுதுகின்றனா். மேலும், தோ்வு மையங்களைக் கண்காணிக்க 15 பறக்கும் படை குழுக்களும், 44 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாளை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ச.உமா வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்திக்கிறார். எனவே அங்கீகரிக்கப்பட்ட அனைத்து செய்தியாளர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு செய்து தொடர்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.