India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமலிங்கம் இதுவரை நடைபெற்ற 5 சுற்றுகளில் திமுகவை விட குறைவான வாக்குகளை பெற்று பின்தங்கி வருகிறார். இதனால், பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், பாஜக முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்..
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் ஐந்தாம் சுற்று நிலவரப்படி, கொமதேக: 1,15,908
அதிமுக : 1,14,091, பாஜக: 22,821, நாம் தமிழர்:22,796, கொமதேக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலை வகித்து வருகின்றனர். (வித்தியாசம் – 1,817).
நாமக்கல் மக்களவை தொகுதியில் 4வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 93,821 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 90,660 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் 18,511 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 18, 229 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாமக்கல் மக்களவை தொகுதி 3-வது சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது.திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 69860 வாக்குகள் பெற்றுள்ளார்.அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 67671 வாக்குகள் பெற்றுள்ளார்.பாஜக வேட்பாளர் ராமலிங்கம்-13977 வாக்குகள் பெற்று பின்ன்னடைவை சந்தித்துள்ளார் .
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
இதில் அதிமுக- 24,018 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் திமுக-22,929, மூன்றாவது இடத்தில் பாஜக-5,032 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் தொகுதியில் மொத்தம் 78.16% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் மாதேஸ்வரன், அதிமுக சார்பில் கவிமணியும், பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2019இல் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி.சின்ராஜ் 23.47% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட காளியப்பன் 265,151 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் மாதேஷ்வரனும், அதிமுக சார்பில் கவிமணியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?
ஈரோடு மாவட்டம் பூந்துறையை சேர்ந்தவர் சரவணகுமார் (50) சமையல் தொழிலாளியாக உள்ளார். இன்று அதிகாலை காடச்சநல்லூர் பகுதியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு சரவணகுமார் மற்றும் அவருடைய மனைவி, செல்வி வந்துள்ளனர். அதிகாலை நேரத்தில் கடைக்கு செல்வதற்காக காடச்சநல்லூர் பிரதான சாலை பகுதிக்கு சரவணகுமார் வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 2024ம் ஆண்டு ஜீன் 10 முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,98,400 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.