India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

➤ நாமக்கல் எஸ்பி கேக் வெட்டி கொண்டாட்டம் ➤ நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் ➤ நாமக்கல் எம்பி புத்தாண்டு வாழ்த்து ➤ பெருமாள் கோவிலில் 1008 தீபம் ஏற்றி வழிபாடு ➤ பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய போலீசார் ➤ நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து ➤ நாமக்கல்லில் பருத்தி ரூ.110 லட்சம் ஏலம் ➤ பள்ளிபாளையம் காவேரி ஆற்றில் சாயக்கழிவுகள்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (01/01/2025) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இஆப தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணா, பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாதேஸ்வன், .பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் .பெ.இராமலிங்கம், .கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி ஆகியோர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்று தெரிவித்துக்கொண்டனர்.

நாமக்கல் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாமக்கல்.1997ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று சேலம் மாவட்டத்திலிருந்து, நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமானது. கோழிப் பண்ணைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற மாவட்டம் ஆகும்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மருத்துவர் கேபி ராமலிங்கத்தை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அவர் இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, பொதுச் செயலாளர் முத்துக்குமார் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லோகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் நேரில் சந்தித்தனர். தொடர்ந்து கட்சியின் தினசரி காலண்டரை அவரிடம் வழங்கினர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் இன்று தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை X பக்கத்தில் மக்களுக்கு தெரிவித்தார். அவர் ஆங்கில புத்தாண்டை அனைவரும் பாதுகாப்பாக விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடும் படி கூறினார். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அதிமுகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்சியினர் சந்தித்தனர். தொடர்ந்து அவருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 31ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.

➤ விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ➤ ராசிபுரத்தில் ரூ.26 லட்சத்திற்கு பருத்தி ஏலம் ➤ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 800 போலீசார் ➤ தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் ➤ ஆட்சியர் தலைமையில் பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு ➤ எலச்சிபாளையத்தில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் ➤ முத்துகாப்பட்டியில் சணல் பை தயாரிப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (31.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல், திருச்செங்கோடு – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.