India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல், ராசிபுரம் வட்டம் இராசிபுரம் நகரில் இருந்து பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் அரைகுறை ஆடையுடன் போதை ஆசாமி ஒருவர் இன்று ரகளையில் ஈடுபட்டார். இந்த காட்சியை காணும் பொதுமக்கள் மற்றும் பெண்களை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. மேலும் போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையில் அமர்ந்து அட்டகாசம் செய்து வந்தார்.
தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு பொறுப்பேற்று உள்ளார். மேலும் 2வது முறையாக மீண்டும் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் ராம்குமார் டெல்லியில் நேற்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் மாதம் 25.06.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு விரால் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.ஆகையால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள 04286 04286 266345, 266650, 7358594841 என்ற எண்ணில் பதிவு செய்து பயன்பெறலாம்.
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இணைப்பதிவாளா் க.பா.அருளரசு தெரிவித்துள்ளாா்.நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு ஜூலை 19-க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரி, இரவு வெப்பம் 73.4 டிகிரி அளவுகளில் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பன்முக திறமைகள் புரிந்த நபர்களுக்கான “பத்ம விருது” குடியரசு தின விழா அன்று வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விருதுக்கு தொலைபேசி எண்.04286-299460 என்ற அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் இன்று (ஜூன் 11) சங்க வளாகத்தில் நடைபெற்றது. ஆர்.சி.ஹெச் ரகம் 2150 ரூபாய் முதல் 8100 ரூபாய் வரையும், மட்ட ரகம் ரூ.4229 முதல் 4935 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. சங்கத்திற்கு மொத்தம் 470 பருத்தி மூட்டைகள் ரூ 11.50 லட்சத்திற்கு ஏலம் போனது.
நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் , நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தமிழகம் முழுக்க டி என் பி எஸ் சி தேர்வு 9 ந் தேதி நடைபெற்ற நிலையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட மையங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ச.உமா பார்வையிட்டார்.மாவட்டத்தில் 174 மையங்களில் 51433 பேர் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன நாமக்கல் மாவட்டம் முழுவதும் 41278 பேர் தேர்வு எழுதினர் 10137 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை
,நாமக்கல்லில் நேற்று, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் 60 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசில் இருந்து, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்சமாக 60 காசுகள் வரை, முட்டை விலை உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
Sorry, no posts matched your criteria.