India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 9 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- பாலசுப்ரமணியம் ( 9442851418), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), பள்ளிபாளையம் – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – ரகுநாத் ( 9788448891), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 9) நாமக்கல் – கோமதி ( 9790948987), ராசிபுரம் – சுரேஷ் ( 9788015452), திருச்செங்கோடு – சிவகுமார் ( 9498177601), வேலூர் – சினிவாசன் (9498176551 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய 7 தாலுகாக்களில் 124 மையங்களில் வரும் 12ம் தேதி சனிக்கிழமை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 36,436 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வு காலை 09.30 மணியளவில் தொடங்கவுள்ளதால், தேர்வர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. நாமக்கல் மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT (<<17007667>>தொடர்ச்சி 1/2<<>>)
▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001739>>CLICK HERE<<>>)
▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <
நாமக்கல்: குமாரபாளையத்தைச் சேர்ந்த முத்துவேல்(70) எனும் தறிப்பட்டறை தொழிலாளி வட்டமலை அருகே தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன், மகளைப் பார்க்க நேற்று முன் தினம் மதியம் சென்று விட்டு திரும்பிய போது சேலம் – கோவை பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியக வந்த கார் முத்துவேல் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஜூலை 15 ஆம் தேதி தொடங்கும் இம்முகாம் தொடர்ந்து செப்டம்பர் 30ந் தேதி வரை நடைபெறும். இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படும். எனவே முகாம் நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக தெரிவிக்கப்படும் என்று கலெக்டர் துர்க்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.