India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று எதிர்பாராத விதமாக மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா், விதவையா் வயது உச்சவரம்பின்றி தொழில் தொடங்க அதிகபட்சம் ரூ. ஒரு கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், அந்த தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானிய சலுகை பெறலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233079 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துவிதமான கடைகள், வணிக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருகின்ற மே-15 ந் தேதிக்குள் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா உத்தரவிட்டுள்ளார்
வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்டவேலைவாய்ப்பு மையத்தில் “தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறவுள்ளது. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற போன் நம்பரை தொடர்பு கொள்ளலாம். இந்த அறிவிப்பினை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் சேந்தமங்கலம்,மோகனூர், இராசிபுரம், திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய தாலுக்காக்களில் கிராவல், சாதாரண கற்கள், கிரானைட் குவார்ட்ஸ் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) மற்றும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா அறிவுறித்தியுள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.7) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.89 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 7ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது கோடை வெப்பம் முட்டை நுகர்வு என பல்வேறு காரணங்களால் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆகவே இருக்கிறது.
மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கம்பி வேலி மீது கை வைத்ததில் இளஞ்சியத்தை மின்சாரம் தாக்கியது. அடுத்தடுத்து ஐவி மற்றும் சுஜீத் மீது மின்சாரம் தாக்கியது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்குக் அனுப்பிவைத்தனர். அங்கு மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் இன்று (ஏப்.07) தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்
நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை <
Sorry, no posts matched your criteria.