India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியக் கடலோர காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10 மற்றும் +2 முடித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளமாக 21 ஆயிரம் முதல் 47,600 வரை வழங்கப்படும் . விண்ணப்பிக்க இங்கே <

குமாரபாளையம், வளையக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 59; காய்கறி வியாபாரி. இவரது மனைவி பொன்னியம்மாள். கடந்த, வட்டமலை சந்தைக்கு காய்கறி வியாபாரத்துக்கு ஆறுமுகம் சென்றார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 14ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கணவரின் மரணம் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மனைவி போலீசில் புகார் செய்தார்.

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு சார்பாக 200க்கும் மேற்பட்ட தமிழகத்தின் முன்னணி மற்றும் உலக அளவில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரி முதுநிலை பட்டதாரி என அனைவரும் கலந்து கொள்ளலாம். இடம் ஞானமணி கல்லூரி வளாகம் 01/03/2025சனிக்கிழமை நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஏழாவது படிக்கும் மாணவி ஒருவரை, நேற்று பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளான். இதனை பொதுமக்கள் வசம் அந்த மாணவி சொல்ல, பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து கவனித்துள்ளனர். தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி (உயிருடன்) கிலோ ரூ.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற, கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.96 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் முட்டைக்கோழி ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அதேபோல் 25 (ம) 26-ந் தேதிகளில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகரப்பகுதி முழுவதும் இன்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதனை முன்னிட்டு இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பயணியர் மாளிகையில், நாமக்கல் பாஜக உறுப்பினர்கள், அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், இவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் இதர நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

நாமக்கல் மண்டலத்தில் 465 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக அதிகரித்துள்ளது. முட்டை விலை உயர்ந்துள்ளதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.