India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள். @ FL 1/ FL2/FL3 FL 3A, FL 3AA மற்றும் FL 11 வரையிலான உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம் நாமக்கல்லில் இன்று ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று 8ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (09-04-2025) புதன்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.89 ஆகவும், முட்டை கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.85 ஆகவும், முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நீடித்து வருகிறது. மேலும் கறிக்கோழி விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலையில், இன்றும், நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நெறிமுறைகள் நாமக்கல் மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ▶️வெளிர் நிறமுடைய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும் ▶️நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களான தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி ஆகியவற்றை உட்கொள்ளவும் ▶️ பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.(ஷேர் பண்ணுங்க)
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியானது தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், திறமையும் உள்ளோர் வரும் ஏப்ரல் 22 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கிளிக் பண்ணுங்க
பள்ளிபாளையம், திருச்செங்கோடு சாலையில் செயல்பட்டு வரும், ஆட்டோலூம் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த சம்மர்தாஸ். ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தான் இரண்டாவதாகத் திருமணம் செய்த பெண் ஒருவரின் ஒரு வயது மூன்று மாத பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வளர்ப்புத் தந்தையான சம்மர்தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம்மோகனூர் ஆண்டாபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி உள்பட இரண்டு குழந்தைகள் மின் விபத்தில் உயிரிழந்த பரிதாப நிலையில் நேற்று உயிரிழந்தவுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதியுதவி கேட்ட நிலையில் தமிழக முதல்வர் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்சம் அறிவித்துள்ளார்.நிதி உதவி அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நாமக்கல் எம்.பி.மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த இன்றைய (08.04.2025) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.480 குறைவு ஒரு கிராம் விலை ரூ.8,225-க்கும், ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.65,800-க்கும், முத்திரை காசு 1 பவுன் ரூ. 66,400-க்கும், முத்திரை காசு 1 கிராம் ரூ.8300-க்கும், விற்பனை வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.