India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று அக்.15ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் குமாரபாளையம் 35 மி.மீ, மங்களபுரம் 9.80 மி.மீ, மோகனூர் 12 மி.மீ, நாமக்கல் 3 மி.மீ, புதுச்சத்திரம் 19 மி.மீ, சேந்தமங்கலம் 4 மி.மீ, திருச்செங்கோடு 12.40 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 35 மி.மீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 130.20 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1)நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

நாமக்கல் பட்டதாரிகளே.. IT துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Advanced Python Programming’ பயிற்சி வழங்கப்படுகிறது. ஐடி துறையில் பணிபுரிய நினைப்போருக்கு இது மிக அவசியமான பயிற்சியாகும். மொத்தம் 2058 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <

நாமக்கலில் இருந்து இன்று(அக்.15) நள்ளிரவு 1:20 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், நாயுடுபேட்டா, குண்டூர், நெல்லூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை -பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமக்கல்: பெங்களூரில் இருந்து 200 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்த கார், நேற்று(அக்.14) மாலை நெடுஞ்சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த வடமாநில வாலிபர் உடல் நசுங்கி பலியானார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

நாமக்கல்: தீபாவளி பண்டிகை காலங்களில் கடைகள், பேக்கரிகளில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பொருட்களின் தரம் குறித்து ஏதேனும் குறைகளை சந்தித்தால், பொதுமக்கள் அந்த உணவுப் பொருட்கள் சம்மந்தமாக 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், TN Goodsafety Consumer App எனும் செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று(அக்.15) 5 மி.மீட்டரும், நாளை (அக்.16) 16 மி.மீட்டரும், நாளை மறுநாள் (அக்.17) 14 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கலில் இருந்து நாளை(அக்.16) இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை செல்ல 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயிலிலும், அக்.16 அதிகாலை 4:55 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை செல்ல 06122 செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் பகுதி மக்கள் இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபலமான கடைகளின் பெயரில் விலைகுறைப்பு அல்லது பரிசு அறிவிப்பு என்ற பெயரில் மோசடி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற போலி இணைப்புகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஏதேனும் மோசடிகள் நடந்தால் உடனே 1930 என்ற சைபர் குறை தீர்க்கும் எண்ணை அழைக்கலாம்.
அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.