Namakkal

News October 15, 2025

நாமக்கல்: இனி வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்!

image

நாமக்கல்: தீபாவளி பண்டிகை காலங்களில் கடைகள், பேக்கரிகளில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பொருட்களின் தரம் குறித்து ஏதேனும் குறைகளை சந்தித்தால், பொதுமக்கள் அந்த உணவுப் பொருட்கள் சம்மந்தமாக 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், TN Goodsafety Consumer App எனும் செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News October 15, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று(அக்.15) 5 மி.மீட்டரும், நாளை (அக்.16) 16 மி.மீட்டரும், நாளை மறுநாள் (அக்.17) 14 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 15, 2025

நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து நாளை(அக்.16) இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை செல்ல 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயிலிலும், அக்.16 அதிகாலை 4:55 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை செல்ல 06122 செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் பகுதி மக்கள் இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 15, 2025

நாமக்கல்: தீபாவளி சலுகை மோசடி ; உஷார்!

image

நாமக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபலமான கடைகளின் பெயரில் விலைகுறைப்பு அல்லது பரிசு அறிவிப்பு என்ற பெயரில் மோசடி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற போலி இணைப்புகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஏதேனும் மோசடிகள் நடந்தால் உடனே 1930 என்ற சைபர் குறை தீர்க்கும் எண்ணை அழைக்கலாம்.
அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

News October 15, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(அக்.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

image

நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இன்று(அக்.14) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 510 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

News October 14, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கலில் இருந்து நாளை(அக்.15) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 14, 2025

நாமக்கல் இளைஞர்களின் கவனத்திற்கு!

image

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் இளைஞர்கள் தொடர்ந்து உதவித்தொகையை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்கும்படி ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

நாமக்கல்: தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை!

image

நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் (ம) ஓய்வூதிய உதவித்தொகை குடும்ப அட்டைதார்களுக்கு கூட்டுறவுத்துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளதாக எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். எனவே, உங்கள் பகுதியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் தேதி குறித்து தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியை சேர்ந்த நியாய விலைக்கடைகளை அணுகவும்.

News October 14, 2025

திருச்செங்கோடு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் பிடித்தனர். இந்நிலையில், சம்பவத்தின் போது கைதிகளில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் பிடிபட்ட இருவருக்கு தலா
12 ஆண்டுகள் சிறை தண்டனையும் எஞ்சிய 4 பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

error: Content is protected !!