India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
கொல்லிமலையில் வரும் 8ம் அகத்தியர் அறக்கட்டளை துர்வாசகர் பவுண்டேஷன் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அறப்பளீஸ்வரர் ஆலயம் அருகில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோ பூஜை உலக நன்மைக்காக யாகம் துறவியர் மாநாடு அன்னதானம் உள்ளிட்டவர்கள் நடைபெற உள்ளது. சைவ ஆதீனங்கள் வைணவ ஜின்கள் கோவில் பூசாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள் தொடர்புக்கு 94459 13417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
குமாரபாளையம் அருகே சடையப்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(75). இவர் நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் அதே பகுதியை சாலையை கிடைக்கும் போது, அவ்வழியாக வேகமாக வந்த பைக் இவர் மீது மோதியது. அதில் ராமன் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். இவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3000 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும், சிலம்பம் பயிற்சி நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இன்று 26ஆம் தேதி காலை 8 முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் இடைவிடாது நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எஸ்.பி ராஜேஸ்கண்ணன், எம்.பி, எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்கின்றனர்.
ப.வேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி (ம) வண்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காமதேனு விநாயகர், பாம்பின் மீது அமர்ந்து செல்லும் விநாயகர், தாமரை மீது அமர்ந்த விநாயகர், பஞ்சமுக விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், மயில்வாகனத்தில் அமர்ந்து செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல், மோகனூரை தலைமை இடமாக கொண்டு விவசாய முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது அதன் பொதுச்செயலாளராக பாலசுப்ரமணியன் இருந்து வருகிறார். இந்த அமைப்பு பொதுமக்களுக்காக போராடி வருகிறது. இதனிடையே காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக முயற்சி செய்கிறது. இதை தடுப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு விமுக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் ஹிந்தியில் கடிதம் எழுதியுள்ளார்.
நாமக்கல் – சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை இன்று மதியம் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையத்தில் சீரமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், அனைத்து பகுதிகளிலும் விளக்குகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்றும் கேட்டறிந்தார்.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இன்று 11 மணி அளவில் பல்வகை வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக முத்தங்கி சாற்றப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட, மாநில பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் பெற்று சென்றனர்.
நாமக்கல்லில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், கட்சியில் சரியாக பணியாற்றவில்லை என்றால், கண்டிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. அதிமுக ஆட்சி அமைக்கும் போது அரிசி அட்டை வைத்துள்ளவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்றார்.
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு சுவற்றில் விளம்பர மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை நேற்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி சுவற்றை சுத்தப்படுத்தினர். இந்நிலையில் அந்த சுவற்றில் அரசின் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.