India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம் நாளை (22.08.2025 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட வாய்ப்புகள் செய்துத்தரப்படும்.
நாமக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
நாமக்கல் மக்களே..பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க 5 இடங்களை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது. எஸ்.இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரை விநாயகா் கோயில், பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதி, குமாரபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதி, ப.வேலூா் காவிரி ஆறு,மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில் காவிரி படித்துறை என 5 இடங்கள் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு மைசூர், மாண்டியா, கெங்கேரி, பெங்களூரூ, கிருஷ்ணராஜபுரம் போன்ற பகுதிகளில் இருந்து நாமக்கல் வந்து செல்லவும், நாமக்கல்லில் இருந்து மதுரை, விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று திரும்பவும் 06241/06242 மைசூர் – திருநெல்வேலி – மைசூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நாமக்கல் மக்களே முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள் .
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அரசு சார்பில் பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ₹5 லட்சம் சிறப்புப் பரிசு மற்றும் ₹7,000 மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள, தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம், என நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். SHAREIT
நாமக்கலில் இருந்து வெள்ளிக்கிழமை 22/8/2025 காலை 6:15 மணிக்கு பெங்களூரூ, ஹூப்ளி, பெலகாவி, மிரஜ், கல்யாண், புனே, சூரத், வதோதரா, அகமதாபாத், அபூ ரோடு, ஜோத்பூர், பிகானீர், சூரத்கர், ஶ்ரீ கங்கா நகர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 22498 திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் அதனை தொடர்ந்து இன்று நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் இன்று உள்ளனர்.
நாமக்கலில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, அதே விலையில் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளபோதிலும், விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.20 ) நாமக்கல் – கபிலன் ( 9498178628), ராசிபுரம் – சுகவனம் ( 9498174815), திருச்செங்கோடு – முருகேசன் ( 9498133890), வேலூர் – பழனி ( 9498110873) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.