India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (15.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே.., தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் போட்டாச்சா..? கவலை வேண்டாம்! தமிழக அரசின் சிறப்பு பஸ்களில் மலிவு விலையிலேயே புக் செய்யலாம். அதற்கு இங்கே <

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளில் 77,434 விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள 13,416 விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது பதிவு செய்யாதவர்கள் வரும் அக்.25ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் லத்துவாடி அருகே உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (அக்.16) காலை 10 மணி முதல் 4 மணி வரை “தக்காளி மற்றும் மிளகாய் ஊட்டச்சத்து மேலாண்மை” பற்றிய ஒரு நாள் இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பினை முனைவர் சு. சத்யா அவர்கள் வழி நடத்துகிறார். எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் 04286-266345, 99430-08802 இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று அக்.15ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் குமாரபாளையம் 35 மி.மீ, மங்களபுரம் 9.80 மி.மீ, மோகனூர் 12 மி.மீ, நாமக்கல் 3 மி.மீ, புதுச்சத்திரம் 19 மி.மீ, சேந்தமங்கலம் 4 மி.மீ, திருச்செங்கோடு 12.40 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 35 மி.மீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 130.20 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1)நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

நாமக்கல் பட்டதாரிகளே.. IT துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Advanced Python Programming’ பயிற்சி வழங்கப்படுகிறது. ஐடி துறையில் பணிபுரிய நினைப்போருக்கு இது மிக அவசியமான பயிற்சியாகும். மொத்தம் 2058 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <

நாமக்கலில் இருந்து இன்று(அக்.15) நள்ளிரவு 1:20 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், நாயுடுபேட்டா, குண்டூர், நெல்லூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை -பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமக்கல்: பெங்களூரில் இருந்து 200 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்த கார், நேற்று(அக்.14) மாலை நெடுஞ்சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த வடமாநில வாலிபர் உடல் நசுங்கி பலியானார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.