India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி கிராமத்தில் 76 வது குடியரசு தின விழாவையொட்டி வரும் 2025 ஜனவரி 26 ம் தேதி இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் அவர்கள் நேரில் வந்து செல்லப்பம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கொடி மரத்தில் நமது நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைக்க வேண்டும் என காந்தியவாதி ரமேஷ் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களிடம் நேரில் மனு அளித்துள்ளார்
இராசிபுரம் வட்டத்தில் இன்று தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான, ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம் பின்வரும் ஊர்களில் நடைபெறும். அதன்படி இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் அலுவலகங்களிலும் நடைபெறும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என ஆட்சியர் உமா இன்று அறிவித்தார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 9ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.90 ஆக நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
கொல்லிமலையில் சுற்றுப்பயணம் செய்த டில்லியை சேர்ந்த தொண்டு நிறுவனம், பழங்குடியின மக்களுக்கான ஸ்மார்ட் ட்ரைபல் பார்மிங் புராஜெக்ட் திட்டத்தின் கீழ், 3 கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். தேவனுார் நாடு, சேலுார் நாடு, திண்ணனுார் நாடு கிராமங்களை தேர்வு செய்துள்ளனர். இதை பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி வரவேற்றுள்ளார். இதனால் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும் என தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி பகுதியில் உள்ள கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரி B.tech food technology துறையைச் சார்ந்த முதலாம் ஆண்டு மாணவர் தனுஷ் தென்னிந்திய பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு முதல் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் அண்ணமார்நகரை சேர்ந்தவர் பெரியசாமி (50), நேற்றிரவு பெரியாசமி புரோட்டா வாங்க தனது டூவீலரில் வீட்டிலிருந்து புறப்பட்டு மோர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பிள்ளாநத்தம் நாதன்காடு பகுதியில் வினோத்குமார் என்பவர் தனது உறவினர் ஒருவரை டூவீலரில் அழைத்து கொண்டு பருத்திப்பள்ளி நோக்கி வந்தபோது 2 டூவீலர்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (10-12-2024) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: சூரியம்பாளையம், தேவனாங்குறிச்சி, கிழேரிபட்டி, தொண்டிகரடு, முட்டன்செட்டி, செல்லிபாளையம், வரதராஜபுரம், முசல்நாயக்கன்பாளையம், கருந்தேவன்பாளையபம், மற்றும் சில பகுதிகள்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வேத பிறவி (94981 67158), ராசிபுரம் சுகவானம் (94981 74815), திருச்செங்கோடு -முருகேசன் (94981 33890), வேலூர்- சரண்யா (87785 82088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நவ.01இல் முட்டை கொள்முதல் விலையை 540 காசாக நிர்ணயம் செய்தது. தொடர்ந்து விலை படிப்படியாக உயர்ந்து டிச.03இல் 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால், முட்டை ஏற்றுமதி தினமும் 40 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 50% குறைந்து, 20 லட்சமாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.