India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வனத்துறையால் வன உயிரின வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் (05.10.2024 மற்றும் 06.10.2024) நாமக்கல் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவையொட்டி ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள நாமக்கல் மாவட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளை, வழியனுப்பி வைத்தார். இந்த விழாவில் நாமக்கல் மாவட்ட விளையாட்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்
நாமக்கல் முதலைப்பட்டிபுதூனர் புதிய பேருந்து நிலையம் வியாபார கடைகள் வெள்ளிக்கிழமை (அக்.4) பொது ஏலத்தில் விடப்படுகின்றன. பொது ஏலம் வெள்ளிக்கிழமை அன்று காலை 11.30 மணி வரையில் ஒப்பந்தப்புள்ளி கோரலாம். இந்த ஏலம், நாமக்கல் மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கடைகள், இதர இனங்களை ஏலம் எடுக்க விண்ணப்பித்துள்ளோா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாமக்கல், குமாரபாளையம் தட்டாங்குட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். பெங்களுருவில்இருந்து பழனி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து லாரியை முந்த முயன்ற போது கவிழ்ந்தது. இவ்விபத்தில் ஓட்டுநர் வீர பரதீப் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (03-10-2024) நிலவரப்படி கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ. 104-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.107-க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும் முட்டை விலையை பொறுத்தவரையில் ஒரு முட்டை 505 காசுகளாக நீடித்து வருகிறது. புரட்டாசி எதிரொலியாக விலைகளில் எதுவும் மாற்றம் இன்றி நீடித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்துக்கு இம்மாதம் வருகை தருகிறார். இந்நிலையில், விழா மேடை அமைக்கும் இடத்தை எம்.பி கே.ஆர்.என் ராஜேஸ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும். ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், மூத்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் ஏழுமலை என்பவருக்கு, ஒரு நாள் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர் 3 கோப்புகளில் கையொப்பமிட்டார். மேலும், தூய்மை பணியாளர்கள் அனைவரும் போதைப்பொருட்களுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. புரட்டாசி அம்மாவாசை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்ககவசம் சாற்றப்பட்டுதுளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
பரமத்தி அருகே உள்ள நல்லியம்பளையம் பகுதியில் சிலர் போதை மாத்திரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்ததில் நித்திஷ், கெளதம், பசுபதி, ஒரு சிறுவன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பரமத்தி வேலூர் பகுதிகளில் போதை மாத்திரை பயன்படுத்திவது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் தக்காளி 40 ரூபாய் வெங்காயம் 50 ரூபாய் சின்ன வெங்காயம் 80 ரூபாய் கத்திரிக்காய் 40 ரூபாய் வாழைக்காய் ஒன்று 10 ரூபாய் வெண்டைக்காய் 20 தேங்காய் 40 ரூபாய் எலுமிச்சம் பழம் 100 ரூபாய் பூண்டு 300 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை அமாவாசை என்பதால் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர்.
Sorry, no posts matched your criteria.