India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்..? வேலை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா..? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) 1 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!
நாமக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கபடவுள்ளது. பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன், தங்கும் வசதி மற்றும் உணவும் வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்துதரப்படும். இங்கே <
நாமக்கல்லில் நேற்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதன் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட்.19 ) நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004 ), ராசிபுரம் – ஆனந்தகுமார் ( 9498106528), திருச்செங்கோடு – மகாலக்ஷ்மி ( 7708049200), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். SHARE IT
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதன் பண்ணை கொள்முதல் விலை ₹5 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.
நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாக தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.