India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – கோமலவள்ளி( 8610270472), திருச்செங்கோடு -தவமணி (9443736199), வேலூர் – செல்வராஜ் (9498153088) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் பிற துறையினர் அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது மற்றும் மிரட்டல் மற்றும் அச்சுறுத்துவது கண்டறியப்பட்டால் உடனடியாக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் கைபேசி எண் பதிவு செய்ய மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் 19ஆம் தேதி நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அக்.17ஆம்தேதி (நாளை) 10 மணிக்கு நெல் சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பேராசிரியர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமை முடிவுற்ற நிலையில் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.05 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது புரட்டாசியில் முட்டை நுகர்வு சற்று குறையும் இதனால் விலையும் குறையும் என கருதப்பட்டது முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டை ரூ 5.05க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக மாவட்ட எஸ்பி அவர்கள் அறிவிப்பார் அதன்படி இன்று ரோந்து பணி அலுவலர்கள் விபரம் நாமக்கல்-கோவிந்தராஜன் (9498170004), ராசிபுரம்- சுகவனம்(9498174815), திருச்செங்கோடு-முருகேசன் (9498133890), வேலூர்- கங்காதரன்(9498136888) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதன்படி நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் குறைதீர் மனு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். பொதுமக்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வழக்கம். இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற அக்.18ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்ளுக்கான வானிலையில் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். புதன் மற்றும் வியாழக்கிழமை கனமழையும், மற்ற நாட்களில் லேசானது முதல் மிதமான மழையும் மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 82.4 டிகிரியாகவும், இரவு வெப்பம் 66.2 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்.24ஆம் தேதி ஒருங்கிணைந்த மீன் பண்ணை அமைப்பது குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் விவசாயிகள், கல்லூரி மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மீன் பண்ணை அமைக்க விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.