India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28), இவரது மனைவி துர்கா (20). இருவரும் புதுமண தம்பதிகள். நேற்று காலை சுரேஷ் வெந்நீர் போட சமையல் கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதன் காரணமாக திடீரென சுரேஷ் மீது தீப்பற்றி எரிந்தது. தடுக்க வந்த அவரது மனைவி துர்கா மீதும் தீப்பற்றியது. அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் டிச.30ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 5 மணி அளவில் ஆஞ்சநேயர் 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பின்னர் 11 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதன்பிறகு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் பூண்டு விலை திடீரென உயர்ந்து ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.380-க்கு விற்பனையானது. ஆனால் சில்லரை விற்பனை கடைகளில் முதல்ரக பூண்டு கிலோ ரூ.480 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. 2வது ரக பூண்டு கிலோ ரூ.425 முதல் ரூ.450 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.86 ஆக அதிகரித்துள்ளது. முட்டை விலை 590 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.105 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
➤ மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு ➤ ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் ஆட்சியர் ஆய்வு ➤ நாமக்கல் மாவட்டத்தில் 144.50 மிமீ மழை பதிவு ➤ தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்பி ➤ மகளிர்க்கான விடியல் பயண பேருந்து தொடக்க விழா ➤ திமுக அலுவலகத்தில் பொதுக்கூட்டம் ➤ சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ திறக்கப்படும் எம்.பி. தெரிவிப்பு ➤ சிறப்பு அலங்காரத்தில் தத்தகிரி முருகன்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9894167158), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதிற்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் https://awardstn.gov.in இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அதற்குள் அனுப்ப வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இணைத்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மூட்டு எலும்பு பரிசோதனை முகாம் நாளை,காலை முதல் 1.00 மணி வரை பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துத்திக்குளம் தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் இனி வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பகல் வெப்பம் 78.8-க்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8-க்கு மிகாமலும் இருக்கக் கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நெய்கெளுத்தி மீன்வளர்ப்பு ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04286 266345, 266650 735855484 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.