Namakkal

News April 24, 2025

நாமக்கல் மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை ஏப்.25ஆம் தேதி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், காலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அதனை தொடர்ந்து கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். SHARE பண்ணுங்க

News April 24, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.80 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-24) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 24, 2025

நாமக்கல்லில் கடன் சுமை நீக்கும் கோயில்!

image

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 24, 2025

நாமக்கல்: உணவு சரியில்லையா? உடனே கால் பண்ணுங்க!

image

நாமக்கல்லில் உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் ▶️வெண்ணந்தூர் மல்லசமுத்திரம்- 9043464656 ▶️குமாரபாளையம் -9688495149 ▶️திருச்செங்கோடு-8754999467 ▶️ராசிபுரம்-9629803229 ▶️ நாமக்கல்-9994928758 ▶️புதுச்சத்திரம் வட்டாரம்-9994928758 ▶️மோகனூர்-7373178787 ▶️சேந்தமங்கலம் கொல்லிமலை வட்டாரம்-7373178787 ▶️நாமகிரிப்பேட்டை -7373178787▶️எலச்சிபாளையம் 9894412621.(SHARE IT)

News April 24, 2025

விபத்தில் காயம் அடைந்த காவலர் உயிரிழப்பு!

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அருகே மோர்பாளையம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு காவலர் இளங்கோ நீதிமன்ற பணி முடித்து திரும்புகையில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 23, 2025

நாமக்கல்: ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி

image

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, ஹூப்ளி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

News April 23, 2025

நாமக்கல்: மின்சார வாரிய தொடர்பு எண்கள்

image

நாமக்கல் மின்சார வாரிய கிளை கோட்டம் வாரியாக செயற்பொறியாளர்கள் எண்கள் நாமக்கல்-04286-221303, பரமத்திவேலூர்-04268-220610, இராசிபுரம்-04287-231014, திருச்செங்கோடு-04288-252900, சங்ககிரி-04283-240536. உங்கள் பகுதியில் உள்ள மின்சாரத்துறைக்கு கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

நாமக்கல்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 144 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 23, 2025

நாமக்கல்: :அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!

News April 23, 2025

நில உடைமை விவரங்கள் பதிவு அவகாசம் நீட்டிப்பு!

image

2025-26 ஆம் ஆண்டிற்கான பிரதா மந்திரி கவுரவ நிதித்திட்ட PMKISAN இன் முதல் தவணை தொகை விடுவிக்கப்பட உள்ளன. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 116181 விவசாயிகளில் 85513 விவசாயிகள் மட்டும் நில உடைமை விவரங்கள் பதிவு செய்து இருப்பதால், மீதமுள்ள விவசாயிகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியர் உமா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!