Namakkal

News April 27, 2025

நாமக்கல்: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு 

image

ராசிபுரம் அடுத்து அத்திப்பலகானூர் அருகே ரயிலில் இருந்த பயணி ஒருவர் தவறி விழுந்ததாக, பயணிகள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து தவறி விழுந்தாரா? வேறு ஏதும் காரணங்களா என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 27, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-27) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 27, 2025

நாமக்கல்லில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45,000. விண்ணப்பங்களை பதிவிறக்க இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 27, 2025

நாமக்கல் மாவட்ட EB எண்கள்!

image

▶️செயற்பொறியாளர், நாமக்கல்: 9445852390
▶️செயற்பொறியாளர், பரமத்திவேலூர்: 9445852430
▶️செயற்பொறியாளர், ராசிபுரம்: 9445852420
▶️செயற்பொறியாளர், திருச்செங்கோடு: 9445852410
▶️செயற்பொறியாளர், சங்ககிரி: 9445852250

News April 27, 2025

நாமக்கல்லில் பாஜகவினர் கைது !

image

நாமக்கல்: சேத்தமங்களம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பாஜக சார்பில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில் சில சர்ச்சைக்குறிய வாசகங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்நிலையில், அப்பகுதி போலீசார் அந்த பேனரை அகற்றி செந்தில் குமரன், இளங்குமரன் ஆகிய பாஜகவினரைக் கைது செய்தனர்.

News April 27, 2025

நாமக்கல் போலீஸ் அதிரடி நடவடிக்கை!

image

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ் தலைமையில், நல்லூர் போலீசார் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், திடுமல் குட்ட பள்ளக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி, பாலசுப்ரமணியம், பூபதி, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஊறல் சாராயம், 17 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.

News April 26, 2025

நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப். 26) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.10 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

News April 26, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு 1 கிலோ ரூ.88 என நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-26) நடைபெற்ற கூட்டத்தில், கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85 ஆகவும், அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 26, 2025

நாமக்கல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

பள்ளி பயிலும் மாணாக்கர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் சேர நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான கடைசி தேதி 05 மே 2025. SHARE IT!

News April 26, 2025

நாமக்கல்லில் தீராத நோய்கள் தீர்க்கும் கோயில்!

image

பேளுக்குறிச்சியில், பழனியப்பர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை, வேட்டைக்காரன் வடிவில், தலையின் உச்சியில் முடியை முடிச்சு போட்டுள்ளது. முருகப்பெருமான் வள்ளியை வசீகரித்து திருமணம் செய்ய அழகான வேட்டைக்கார இளைஞனாக வேடமணிந்த தலம் இது. தோல், எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபடுகின்றனர். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!