India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (17.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (17.10.2025) மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.விமலா, இ.கா.ப., தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள குற்றச் சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் சிறப்புக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய சிறப்புக்குழு உறுப்பினர் மருத்துவர் அ.சுபேர்கான் ஆய்வு மேற்கொண்டு 18 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். மேலும் உடன் ஆட்சியர் துர்கா மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நாமக்கல் மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயாவை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் டிச.13,14 தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. மின் ஒயரிங் தொழிலில் 5 வருட செய்முறை அனுபவம் (ம) 21 வயது நிரம்பியவர் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த இணையதளத்தில் https://skilltraining.tn.gov.in/ விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்தார்.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.15 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.5.20 காசுகளாக அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

நாமக்கலில் இருந்து நாளை (அக்.18) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல, 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.