India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடியது. இதில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ரூ.5.25 விற்பனை செய்யப்பட்ட ஒரு முட்டையின் விலை தற்போது 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் அடுத்த தாளம்பாடியில் மூதாட்டி செல்லம்மாள் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில் இன்று துக்க நிகழ்வில் வெடி வெடித்த போது எதிர்பாராத விதமாக இனோவா காரின் டிக்கியில் மீதமிருந்த சரவெடி, வாணவெடி வெடித்ததில் இனோவா சொகுசு கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த வெடி விபத்தில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை, நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குரங்காத்துப் பள்ளம் பகுதியில் தங்கராசு என்பவர் பைக்கில் கள்ளச்சாராயம் கடத்தியபோது போலீசாரால் கைது செய்யபட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சுமார் 128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, ஊறல் அழிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள் உள்ளிடோர்களுடன் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் அக்.29ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக கோரிக்கைகள் இருப்பின் இக்கூட்டத்தில் தெரிவிக்குமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.25 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. மழையினால் ஏற்பட்ட குளிர் காரணமாக முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை மெல்ல மெல்ல உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.25 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1.நாமக்கல் பூ மார்க்கெட்டில் பூ விலை உயர்வு
2.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்பட்டு அலங்காரம்
3.பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் உமா அறிவித்துள்ளார்.
4.மரூர்பட்டி ஏரியில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை நடத்தினர்
5. நாமக்கல்லில் நில முகவரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில், சுற்றுவட்டார விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதன்படி இன்றைய பூக்கள் விலை விவரம், மல்லி ரூ.280, முல்லை ரூ.200, அரளி ரூ.60, சம்மங்கி ரூ.30, மஞ்சள் அரளி ரூ.100, செவ்வரளி ரூ.100, ஜாதிமல்லி ரூ.260, காக்கட்டான் ரூ.360, நந்தியாவட்டம் ரூ.60 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.
பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. தீபாவளி நாளில் நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் ஒன்று கூடி பொது இடங்களில் அதிக ஒலி இல்லாத, பசுமை பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.