Namakkal

News December 20, 2024

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நாளை (டிச.21) காலை 10 மணிக்கு சேந்தமங்கலம் அரசு கல்லூரி வளாகத்தில் புதிய தொழில் பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

News December 20, 2024

பள்ளி மாணவனை கண்டித்த மாவட்ட ஆட்சியர் 

image

ராசிபுரம் வட்டம் தொப்பம்பட்டியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது, 18 வயது குறைந்த பள்ளி மாணவன் அவ்வழியாக வாகனம் இயக்குவதை பார்த்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மாணவனை கண்டித்து, வாகனத்தை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடார்.

News December 20, 2024

பள்ளி மாணவனை கண்டித்த மாவட்ட ஆட்சியர் 

image

இராசிபுரம் வட்டம் தொப்பம்பட்டியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது, 18 வயது குறைந்த பள்ளி மாணவன் அவ்வழியாக வாகனம் இயக்குவதை பார்த்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மாணவனை கண்டித்து, வாகனத்தை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க இராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடார்.

News December 19, 2024

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – சுப்பிரமணியன் (9498173585), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – பழனி (9498110873) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 19, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நாமக்கல்லில் இரட்டைக் கொலை: சிக்கிய மூவர் ➤ மல்லசமுத்திரத்தில் ரூ.1.35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் ➤ நாமக்கல்லில் விலை உயரும் பீன்ஸ் ➤ பில்லானல்லூர் பேரூராட்சியில் ஆட்சியர் ஆய்வு ➤ வாகனங்கள் மோதியதில் இரு மூதாட்டிகள் பலி ➤ நாமக்கல்லில் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ➤ பட்டணம் பேரூராட்சி பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ➤ பரமத்தி பகுதிகளில் பூக்கள் விலை உயர்வு

News December 19, 2024

வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. 

News December 19, 2024

முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் பெற்றனர்.

News December 19, 2024

நாடாளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் எம்பி

image

அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

News December 19, 2024

மலர் தூவி மரியாதை செலுத்திய எம்.பி. ராஜேஷ்குமார்

image

பேராசிரியர் அன்பழகன் 102வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள எம்.பி. ராஜேஷ்குமார் இல்லத்திலும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்திலும் உள்ள  அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

News December 19, 2024

நாமக்கல்: திருக்குறள் வினாடி வினா போட்டி

image

தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்துத் தேர்வு 21ஆம் தேதி நடத்தப்பட்டு சிறந்த மதிப்பெண் பெறும் 9 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு 3 குழுக்களாக இணைந்து இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு 94877 76832 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ஆட்சியர் கூறியுள்ளார்.

error: Content is protected !!