India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – கபிலன் (9498178628), இராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – சரண்யா (8778582088) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்தது. இந்த காரணங்களால் முட்டை விலையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
பாரதீய கிசான் சங்கம் நாமக்கல் மாவட்டம் மாவட்ட மாநாடு வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் திருச்செங்கோடு சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொரசப் பாளையத்தில் அமைந்துள்ள சர்வ மங்கள மஹாலில் நடைபெற உள்ளது. சங்கத்தின் அகில பாரத துணைத் தலைவர் பெருமாள் மாநிலச் செயலாளர் வீர கேசவன் கோட்ட பொறுப்பாளர் நமச்சிவாயம் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் நாமக்கல்லில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி 04286 290297, 79041 11101, 9499055842 என தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <
நாமக்கல் மாவட்ட நாயுடு சங்க கூட்டம் நாமக்கல்லில் நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேங்கட்சுப்பிரமணி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரியை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் செயலாளர் நாராயணன், பொருளாளர் தங்கவேல், இளைஞர் அணி சக்திவெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் விதவையர்கள், படைவீரர்கள் (ம) அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் (ம) அவர்களை சார்ந்தோர்கள், படைப்பணியில் பணிபுரியும் படை வீரர்களின் குடும்பத்தார்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மின்சார பம்ப்செட்டுக்கு மொபைல் போன் மூலம் இயக்கப்படும் தானியங்கி பம்ப் கன்ட்ரோலர்/ ரிமோட் மோட்டார் ஆபரேட்டர் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. திருச்செங்கோடு மற்றும் நாமக்கல்லில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கூடுதல் விவரங்களை பெற்று பயனடையுமாறு ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் அவர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா தனது கணவருடன் கலந்துகொண்டு சாட்டையடி வாங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார். இதே போல ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை அம்மன் கோவிலுக்கு வந்து நிறைவேற்றி செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.