Namakkal

News April 17, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.86 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-16) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 16, 2025

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (16-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

News April 16, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (16-04-2025) புதன்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.86-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முட்டை விலையை பொறுத்தவரையில், ரூ.4.15 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 16, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் நிலவும் வானிலையில், இன்று 3 மி.மீட்டரும், நாளை (வியாழன்) 4 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 5 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்ச மாக 69.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 16, 2025

நாமக்கல்லில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு நாமக்கல்லை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <>லிங்கை க்ளிக்<<>> பண்ணுங்க.

News April 16, 2025

நாமக்கல்லில் இன்று  சிறப்பு ரயில் இயக்கம்

image

நாமக்கலில் இருந்து இன்று (புதன்) முதல் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (15-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

News April 15, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.86 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (15.04.2025) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 15, 2025

நாமக்கல் காவல் துறை சார்பில் வாகன ஏலம்!

image

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 23 வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை, 17ம் தேதி தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

நாமக்கல் மக்களே! இந்த App முக்கியம்!

image

தமிழகத்தில் “காவல் உதவி App” பொதுமக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டது. எந்த வகையான இன்னல், அவசரநிலையின் போதும் உடனடி உதவியைப் பெறுவதற்காக, கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கையை அனுப்புவதற்கு, இந்த செயலியைப் பயன்படுத்தலாம். இந்நிலையில், மகளிர் அனைவரும் காவல் உதவி செயலியை, தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!

error: Content is protected !!