Namakkal

News April 18, 2025

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (18-04-2025) வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.86-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முட்டை விலையை பொறுத்தவரையில், ரூ.4.15 ஆக நீடித்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நீடித்து வருகிறது.

News April 18, 2025

நாமக்கல் மாவட்டத்தின் EB எண்கள் !

image

▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், நாமக்கல்:9445852390
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், பரமத்திவேலூர்: 9445852430
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், இராசிபுரம்:9445852420
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், திருச்செங்கோடு:9445852410
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், சங்ககிரி: 9445852250

News April 18, 2025

நாமக்கல்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற ஆப்பை பயன்படுத்தி பயணிகள் பயன்பெறலாம்.உங்கள் புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 18, 2025

நாமக்கல் பேக்கரியில் குட்கா!

image

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் நேற்று(ஏப்.17) வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 2 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News April 18, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.86 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-17) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 17, 2025

நாமக்கல் மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 9444163000▶️காவல்துறை கண்காணிப்பாளர் 04286-281000▶️கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை), நாமக்கல் 9597880099▶️ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் 04286-281341▶️மாவட்ட வருவாய் அலுவர் 9445000910 ▶️உணவு பாதுகாப்பு அலுவலர் 9994928758 ▶️ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் 9750912377..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 17, 2025

ஒரு லட்சம் பரிசு ஆட்சியர் தகவல்

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ.100000 பாராட்டுப் பத்திரம் பதக்கத்துடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் 3.5.25 மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

நாமக்கல் வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல்: வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.600 வரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். மேலும், <>www.tnvelaivaaippu.gov.in<<>> என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

News April 17, 2025

நாமக்கல்: சூதாடிய 20 பேர் கைது !

image

திருச்செங்கோடு மலையடிவாரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காசு வைத்து சூதாடுவதாக திருச்செங்கோடு போலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில், அங்கு ஒரு வீட்டில் போலீசார் சுற்றி வளைத்து சோதனையிட்ட போது சுமார் 20 பேர் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் வாகனங்கள் மற்றும் 4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்

News April 17, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று (16/04/2025) இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர்- சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!