India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4.95 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 5.00 காசுகளாக அதிகரித்து உள்ளது. முட்டை விலை உயர்வடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மக்களே.. Income Tax காலியாக உள்ள 386 Legal Assistant, Accounts Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.99 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, நாளை (ஆக.20) மாலை 4 மணிக்கு, நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ, அல்லது இ-மெயில் மூலமோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க..!

நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். உரத்துடன் மற்ற இணை பொருட்களான நுண்சத்துகள், உயிர்ம ஊக்கிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு ஆணை-1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகஸ்ட் 19ஆம் தேதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு காலை 9.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு மாதாந்திர ஆய்வு கூட்டம் 10 மணிக்கு தேர்தல்கள் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டுநர் இலவச பயிற்சி மையத்தில் வெற்றி நிச்சயம் திட்டம் குறித்து ஆய்வு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்

குமாரபாளையம் அருகே உள்ள பாலக்கரை பகுதி சேர்ந்த நாகராஜ் விசைத்தறி கூலி தொழிலாளி. தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள நிலையில் அதிக அளவு கடன் பெற்றதால் நிதி நிறுவனத்தின் கடனை கட்ட அவருக்கு நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மணமுடைந்த அவர் இன்று காலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சியில் உள்ள வார்டு எண்.26, 35 ஆகிய பகுதிகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிபாளையம் நகராட்சி வார்டு எண் 8, 9 ஆகிய பகுதிகளில் ஜி வி மகள் திருமண மண்டபம், பட்டணம் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை ரங்கசாமி திருமண மண்டபத்தில், திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கே ஆர் மகஹாலில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை (19.08.2025) செவ்வாய்கிழமை நடைபெறுகின்றது.
Sorry, no posts matched your criteria.