India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டம் சின்னனூர் வண்ணார்தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (55), முடிதிருத்தும் தொழிலாளி. நேற்று திருச்செங்கோடு ஆன்றாபட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, எதிர் பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பலியானார். அதே மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்றாபட்டியை சேர்ந்த செல்வராஜ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (26-11-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.94, முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.133- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆக நீடிக்கின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை, கடந்த 5 நாட்களாக அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் நீடிக்கின்றது.

நாமக்கல் மாவட்ட நவம்பர்-2025-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 28.11.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்ட நவம்பர்-2025-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 28.11.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

நாமக்கல் வட்டம், A.K.சமுத்திரம், ஞானமணி பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (நவ.26) காலை 10 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. எனவே, கல்வி கடன் தேவைப்படும் நாமக்கல் கோட்டத்தினை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் வட்டம், A.K.சமுத்திரம், ஞானமணி பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (நவ.26) காலை 10 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. எனவே, கல்வி கடன் தேவைப்படும் நாமக்கல் கோட்டத்தினை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (25.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள்<
Sorry, no posts matched your criteria.