India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <

வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட SIR படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திருப்பி ஒப்படைக்க வசதியாக 25.11.2025 முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள்(ம)அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள்(ம) அனைத்து நியாய விலைக்கடைகள் ஆகியவற்றில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பூர்த்தி செய்யப்பட்ட தங்களது SIR படிவங்களை ஒப்படைக்கலாம்.

நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் விதவைகள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நவ.27 நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர், படைவீரர்களின் குடும்பத்தார், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைளை தெரிவிக்கலாம்.

குமாரபாளையம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரந்தர்காடு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக ஆனந்த், யோகேஸ்வரன், பிரபு, கார்த்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.950-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோன்று குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சம்பத், இளங்கோவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் நவ.28ந் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 7 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் சின்னனூர் வண்ணார்தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (55), முடிதிருத்தும் தொழிலாளி. நேற்று திருச்செங்கோடு ஆன்றாபட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, எதிர் பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பலியானார். அதே மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்றாபட்டியை சேர்ந்த செல்வராஜ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (26-11-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.94, முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.133- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆக நீடிக்கின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை, கடந்த 5 நாட்களாக அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் நீடிக்கின்றது.

நாமக்கல் மாவட்ட நவம்பர்-2025-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 28.11.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.