Namakkal

News November 24, 2025

நாமக்கல்லில் கார் மோதி பயங்கரம்!

image

நாமக்கல் மாவட்டம், கதிராநல்லூர் நத்தம்மேடு எம்ஜிஆர் காலனி சேர்ந்தபெரியசாமி (57) வள்ளிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்லும் போது சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த கார் அவரது ஸ்கூட்டரில் மோதி படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News November 24, 2025

மோகனூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் சடலம்!

image

மோகனூர் அருகே வடுகப்பட்டி சேர்ந்த சுப்பிரமணி (75) ஒருவந்தூரில் உள்ள தமிழழகன் விவசாய தோட்டத்தில் தங்கி தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந்தேதி சென்ற அவர் காணாமல் போனார். நேற்று மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. அது சுப்பிரமணி என்பதை மகன் கோபி அடையாளம் கண்டார். மோகனூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

நாமக்கல்: ரூ.23.51 லட்சத்துக்கு காய்கறி பழங்கள் விற்பனை

image

நாமக்கல் கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், விடுமுறை தினத்தை யொட்டி நேற்று காய்கறி மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 44 டன் காய்கறிகள் மற்றும் 11 டன் பழங்கள் என மொத்தம் 55 டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.23 லட்சத்து 51 ஆயிரத்து 570-க்கு விற்பனை செய்யப்பட்டன.

News November 24, 2025

கந்தம்பாளையத்தில் பரபரப்பு! தாய் திட்டியதால் நடந்த விபரீதம்

image

கந்தம்பாளையம் அருகே கரிச்சிபாளையத்தை சேர்ந்த பவதாரணி(18), வேலூர் தனியார் கல்லூரி மாணவி. விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, வேலை செய்யவில்லை என்று தாய் சரோஜா கண்டித்ததாக தெரிகிறது. மனமுடைந்த பவதாரணி 3-ந்தேதி காலை மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயத்துடன் திருச்செங்கோடு, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 24, 2025

நாமக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

நாமக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் <>TANGEDCO <<>>என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News November 24, 2025

நாமக்கல்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT

News November 24, 2025

நாமக்கல்: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

image

நாமக்கல் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!

News November 24, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்கள் அரசின் இலவச தையல் மிஷின் பெற உரிய ஆவணங்களுடன் நவ.25ந் தேதிக்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு (ம) அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாத தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News November 24, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!