India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நவம்பர்-23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: மங்களபுரம் 7.40 மிமீ, நாமக்கல் 11 மிமீ, பரமத்திவேலூர் 16 மிமீ, புதுச்சத்திரம் 5 மிமீ, ராசிபுரம் 10 மிமீ, சேந்தமங்கலம் 4.60 மிமீ, திருச்செங்கோடு 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 4 மிமீ, கொல்லிமலை 9 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 71 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நாமக்கல் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியபடுத்துங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<

ராசிபுரம்–அணைப்பாளையம் ரயில் பாதையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் நேற்று மாலை இருந்தது. முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தார். சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தின் மூலம் அவர் ராசிபுரம் வரதன் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (51) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் செந்தில்குமார் தனக்கு சொந்தமான லாரியை கணேஷ் என்பவரின் பட்டறையில் பழுது நீக்க கடந்த 12ந் தேதி விட்டுள்ளார். இதனை அடுத்து லாரியை காணவில்லை என நல்லிபாளையம் காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் செந்தில்குமார் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பெரம்பலூர் ஆலத்தூர் வரகுபாடியை சேர்ந்த முத்துகுமாரை கைது செய்து லாரியை மீட்டனர்.

நாமக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப் பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

நாமக்கல் மண்டலத்தில் இன்று (நவ.23) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ. 94-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 122-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதே போல், முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வருகின்றது. வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, முட்டை விலை வரலாறு காணாத உச்ச நிலையில் விற்பனையாகி வருகிறது.

நாமக்கல், தும்மங்குறிச்சி மேலப்பட்டி மேல்முகம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயன் (80). விவசாயி. தோட்டத்தில் தனியாக இருந்த சுப்பராயனை மர்ம நபர்கள் இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், படுகாயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் நிலத்தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.