India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

நாமக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

நாமக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் வசிக்கும் சகுந்தலாவின் மகன் யுவராஜ் (29), கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த அவர் தனது தாயாரை தொடர்பு கொண்டு விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தார். உடனடியாக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர்-1ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1.20 மிமீ, கொல்லிமலை செம்மேட்டில் 5.50 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கரூரில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சங்கிலி குண்டு எறிதல், வட்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த கரசப்பாளையத்தை சேர்ந்த சிவசாமி முதல் பரிசை பெற்றார். அவருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முதலைப்பட்டி-நல்லிபாளையம் சர்வீஸ் சாலையில் நேற்று காலை சுமார் 50 வயது ஆண் ஒருவர் நெடுஞ்சாலைக்கும் சர்வீஸ் சாலைக்கும் இடையேயுள்ள பள்ளத்தில் தலையில் காயமடைந்து இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். மேலும் தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே வண்ணான்காடு பகுதியை சேர்ந்த பாவாயி (75) தனியாக குடிசையில் வசித்தார். நேற்று முன்தினம் இரவில் அவரது குடிசையில் தீப்பிடித்து எரிந்ததில் அவர் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மகள் அருனிசா போலீசுக்கு தெரிவித்தார். திருச்செங்கோடு போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, இது விறகு அடுப்பு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பதை போலீசார் உதயகுமார் விசாரித்து வருகின்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் 680.78 மி.மீ மழை பெய்தது. இயல்பு மழையளவை விட நவம்பர் மாத கூடுதலாக 31.37மி.மீ அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகம் காணப்பட்டது. தொடர்ச்சியாக விவசாயிகள் வேளாண் பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் 69767 ஹெக்டர் சிறுதானியங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளதாக, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 680.78 மி.மீ மழை பெய்தது. இயல்பு மழையளவை விட நவம்பர் மாத கூடுதலாக 31.37மி.மீ அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகம் காணப்பட்டது. தொடர்ச்சியாக விவசாயிகள் வேளாண் பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் 69767 ஹெக்டர் சிறுதானியங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளதாக, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அருள்மொழி இன்று பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து எம்பி ராஜேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி சந்தித்து மருத்துவ துறையில் ஆற்றிய பணிக்கு வாழ்த்தினை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.