Nagapattinam

News April 17, 2025

ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

image

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது

News April 16, 2025

பொதுமக்களிடமிருந்து 19 மனுக்களைப் பெற்ற எஸ்.பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.கே. அருண்கபிலன் எஸ்.பி. பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

நாகை அஞ்சலகங்களில் காப்பீடு தொடங்கலாம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட முகாம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடக்கிறது. அஞ்சல் ஆயுள் காப்பீட்டை பட்டதாரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்த அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். அனைத்து காப்பீடுகளுக்கும் குறைந்த கட்டணமே பிரிமியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, என நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

நாகை:அஞ்சல் வழி பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விரும்பும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் இன்று முதல் மே 6ஆம் தேதி வரை www.tncuicm.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இதனை உடனடியான உங்கள் பகுதியினருக்கு Share செய்யுங்கள்..

News April 16, 2025

NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்

News April 16, 2025

நாகையில் ரூ.17000 சம்பளத்தில் வேலை

image

நாகப்பட்டினம் தனியார் நிறுவனத்தில் இலவச நர்சிங் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு உள்ளது. இதில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.14,500 முதல் ரூ.17,000 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. படிப்பை இடைநிறுத்தம் செய்தவர்களும் இதில் பங்கு பெற்று பயன் பெறலாம். இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்

News April 16, 2025

வேதாரண்யத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தில் முருகமணி மனைவி கல்பனா என்ற பெண் தனது அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னே சென்ற டூவீலர் திடீரென பிரேக் அடித்ததில் அந்த வண்டியின் மீது மோதி டூவீலர் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண் கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கல்பனா மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 15, 2025

திருக்குவளைக்கு 16ஆம் தேதி ஆட்சியர் விசிட்

image

திருக்குவளை வட்டத்தில் 16.4.2025 அன்று உங்கள் ஊரில் உங்கள் முதல்வர் திட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை திருக்குவளைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வருகை தருகிறார். அப்போது திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரை சந்தித்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

26 துணை அஞ்சலகங்களில் ஆதார் முகாம்

image

நாகை மற்றும் திருவாரூர் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் 26 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்த சிறப்பு முகாம் வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆதார் திருத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

News April 15, 2025

நாகையில் சத்துணவு பணியிடங்களுக்கு வேலை, ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நாகை ஆட்சியர் பா.ஆகாஷ் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள 93 சமையல் உதவியாளர் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி, தமிழ் சரளமாக பேச வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. Share செய்யுங்கள்

error: Content is protected !!