India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை IOB ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச AC & FRIDGE பழுதுநீக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி, அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நாகை மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 6374005365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!
நாகை மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள இங்கே <
வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.
எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலத்தில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளை பயன்படுத்தகூடாது. சிலைகளுக்கு ரசாயன வண்ணங்கள் பூசக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடத்தில் மட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
நாகை செல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.6) காலை10 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாகை, வெளிப்பாளையம், திருமருகல், கங்களாஞ்சேரி, நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் ரோனிக் ராஜ் தெரிவித்துள்ளார்.
நாகையில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் அல்லது நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.!
நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவற்றை பெற்றிட தகுதிவாய்ந்த நபர்கள், அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் பெற்று கொண்டு, உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப .ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோரக்க சித்தர் கோயிலில் இன்று இரவு அன்னக்காவடியை தோளில் சுமந்து சென்று, தானம் பெறப்பட்டு, பின் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் பலர் கலந்து கொண்டு சித்தர் ஆசியை பெற்றனர்.
நாகையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <
திட்டச்சேரி ப.கொந்தகை நாகூர் சாலை பகுதி சேர்ந்தவர் அப்துல் ஹமீது (75). இவர் நேற்று முன்தினம் காலை குளிப்பதற்காக ப.கொந்தகை பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த அப்துல் ஹமீது சடலமாக கிடந்துள்ளார். திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.