Nagapattinam

News August 7, 2025

நாகை மக்களே.. பட்டா திருத்தம் இனி எளிது!

image

நாகை மக்களே உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <>eservices<<>>.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யவும்!

News August 7, 2025

நாகை: சொந்த ஊரில் அரசு வேலை – ரூ.96,000 சம்பளம்

image

நாகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’18’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கே க்ளிக் <<>>செய்து வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை நபர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

நாகை: அப்ரண்டிஸ் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம்

image

நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற ஆக.11-ந் தேதி காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பல முன்னணி தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்களை அப்ரண்டிஸ் (தொழிற் பழகுநர்) பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளன. எனவே ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலரை (04365-243045) அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 6, 2025

பொதுமக்களிடமிருந்து 14 மனுக்களை பெற்ற எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(ஆக.6) மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், எஸ்பி சு. செல்வக்குமார் மக்களை சந்தித்து, அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 14மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

News August 6, 2025

நாகை: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

image

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு 1,500ரூ முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 6, 2025

தாட்கோ சார்பில் சுகாதார உதவியாளர் பயிற்சி

image

நாகை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் டால்மியா பாரத் நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகிட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News August 6, 2025

நாகை: ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

image

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News August 6, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோபமடைந்த கீழ்வேளூர் எம்எல்ஏ

image

கீழ்வேளூர் ஒன்றியம், ராதாமங்கலத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ராதாமங்கலம், தேவூர், இலுப்பூர், பட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்ற நிலையில், அங்கு வந்த கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலி, ‘முகாம் குறித்து தனக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை?’ என அதிகாரிகளை கடிந்து கொண்டார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

News August 6, 2025

நாகை: வங்கி வேலை பெற கடைசி வாய்ப்பு

image

நாகை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!