India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிரை அடுத்த அருந்தவன்புலத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (59). இவர் கீழையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென காலை நெஞ்சு வலிப்பதாக தனது மனைவி அந்தோணி மேரியிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரத்தூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். அவருக்கு சக காவலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகை நகராட்சி நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் அல்லது பதிவு சான்று இல்லாமல் உணவு வணிகம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் உணவு பண்டங்கள் விற்பவர்கள் மீது தர நிர்ணய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை வருகின்ற 23ந்தேதி நடத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூட்டத்தின் போது ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் நல்ல முறையில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவினரை கெளரவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நாகை மாவட்ட குழந்தை நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த 35 வயதுக்கு மேற்பட்ட 65 வயதுக்கு உட்பட்டவர்கள் மதிப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று இது குறித்த முழு விவரங்களுக்கு நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி நாகப்பட்டினம் வருகை தரவுள்ளார். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாகை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துவார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணாக்கள் “மகளிர் உரிமை” என்ற தலைப்பில் குழு குறும்படம் தயாரிக்கும் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அறிவித்துள்ளார் . இக்குறும்படத்தினை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பித்தல் அவசியம். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ 45,000, இரண்டாம் பரிசு ரூ 30,000 எனவும் மேலும் விவரங்களுக்கு 8281431707 – என்ற எண்ணை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாகை – காங்கேசன்துறை இடையே ஆன சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 18 வரை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் நாகை – காங்கேசன்துறை இரு பகுதிகளில் இருந்தும் பயணிகள் வசதி கருதி 15, 16 ,17 மற்றும் 18 ந்தேதி வரை கப்பல் இயக்கப்பட்டு அதன் பின்னர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள 148 வாகனங்களை வருகின்ற நவ.18 (திங்கள்கிழமை) போது ஏலம் விட்டு அரசுக்கு ஆதாயம் செய்திட ஏதுவாக பழைய வெளிப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற நவ.17 (ஞாயிறு) அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட்டு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆட்டுக்கொல்லி நோயு ஒழிப்பு திட்டத்தின் முதற்கட்ட தடுப்பூசி முகாம் 11/11/2024 முதல் 10/12/2024 வரை நடைபெற உள்ளது. நாகை மாவட்ட விவசாயிகள் தங்கள் ஆடுகளை நோயிலிருந்து பாதுகாக்க அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் அணுகி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு ஆடுகளை பாதுகாத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேதாரண்யம் வட்டம் செட்டி புலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ வடிவழகி அம்மன் கூட்டு பொறுப்பு குழு மற்றும் வேதாரண்யத்தை அடுத்த நாகக் குடையான் கிராமத்தை சேர்ந்த ஶ்ரீ சிவசக்தி கூட்டு பொறுப்பு குழு ஆகியவற்றின் பொறுப்பாளர்களிடம் ஆடுகள் வளர்ப்பதற்காக தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்
Sorry, no posts matched your criteria.