Nagapattinam

News January 1, 2025

நாகை இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

இந்திய விமான படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04365 – 299765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News December 31, 2024

கூடை பந்து போட்டியில் தங்கம் வென்ற மாணவி

image

ஐதராபாத்தில் இந்திய கூடை பந்து கழகத்தால் நடத்தப்பட்ட 49 வது தேசிய அளவிலான கூடை பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்ற நாகை நடராஜன் தமயந்தி மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி காவ்யாவிற்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பாராட்டு தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி உடனிருந்தார்

News December 31, 2024

கடல் சீற்றம் வேதை பகுதியில் மீனவர்கள் பாதிப்பு

image

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களான வானவன் மகாதேவி வெள்ளப்பள்ளம் புஷ்பவனம் ஆறுகாட்டுதுறை ஆகிய பகுதி பைபர் படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு மீன்களின் விலை உயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது

News December 31, 2024

2ந் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஜனவரி 2ந் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

News December 30, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் 171 மனுக்கள் பெறப்பட்டதாக தகவல்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி, உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 171 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்

News December 30, 2024

நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதன் இறுதிக் கட்டத்தை எட்டி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்று (டிச.30) மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று மதியம் 1 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

News December 30, 2024

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

image

வார விடுமுறையால் வேளாங்கண்ணிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குவிந்துள்ளனர். சிலுவை பாதையில் மண்டியிட்டு சென்று பழையமாதா ஆலயத்தில் பிரார்த்தனைசெய்தனர். தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பேராலய வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி, மாதாவுக்கு மாலை அணிவித்தும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் பிரார்த்தனை செய்தனர்.

News December 29, 2024

நாகை கபடி போட்டியில் சென்னை அணி அபார வெற்றி

image

நாகப்பட்டினம் பாப்பா கோவிலில் தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற 34ஆவது சப் ஜூனியர் ஆண்களுக்கான இறுதிச்சுற்று கபடி போட்டியில், தஞ்சை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி வாகை சூடியது. தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாட தகுதி பெற்ற சென்னை அணிக்கு, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

News December 29, 2024

நாகை: ஊராட்சி பெயரை மாற்றக்கோரி அமைச்சரிடம் மனு 

image

திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியின் பெயரினை காமேஸ்வரம் ஊராட்சி என்று பெயர் மாற்றக்கோரி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை நாகையில் நேரில் பார்த்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேஷ் மனு வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், வரும் ஜனவரி 6ஆம் தேதி கூடும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கீழ்வேளூர் எம்எல்ஏவிடம் கலந்து கொண்டு முடித்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

News December 29, 2024

முன்னாள் சேர்மனுக்கு அதிமுக அஞ்சலி

image

நாகை மாவட்ட அதிமுக இணை செயலாளர் செல்வி என் மீனா நேற்று விபத்தில் உயிரிழந்தார். திருக்குவளையில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நாகை மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் OS மணியன் தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜீவானந்தம் ஜெயபால் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!