India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் திமுக சார்பில் வரும் 24ஆம் தேதி அவுரி திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கோட்டை வடிவிலான பிரம்மாண்ட பந்தல் தயாராகி வருகிறது. மீனவர்கள் விவசாயிகள் தூய்மை பணியாளர்கள் என 2,513 நபர்களுக்கு மீன்பிடி வலை மருந்து தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
பிரதமர் சூரிய வீடு இலவச மின்திட்டத்தில் மானியமாக 1 கிலோ வாட்க்கு ரூ.30000, 2 கிலோ வாட்க்கு ரூ.60 ஆயிரம் 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடனுதவியும் வழங்கப்படுகிறது. எனவே சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி பசுமையான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் சண்முகம் (37) என்பவர் உள்ளிட்ட 14 மீனவர்கள் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது, மீனவர் சண்முகம் திடீரென படகில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. மாயமான மீனவரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
வேதாரண்யம் வட்டம், கோடியக்கரை கடல்பகுதியில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில தினங்களாக விடாமல் பெய்த கனமழையினால் மழைநீர் வடியும் வடிகால் சரியான நிலையில் உள்ளதா என வடிகாலை நாகபட்டினம் மாவட்ட ஆட்சிதத்தலைவர் வடிகால் குழாய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
நாகப்பட்டினத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்! நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை (22/11/2024) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு மழை பெய்து வரும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற வருகின்ற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கும் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று கேட்டு கொண்டுள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீஸ் சூப்ரண்ட் ஏ.கே.அருண் கபிலன் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை குறித்தும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்தும் 8428103090 என்ற எண்ணிற்கு தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த வல்லுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேதாரண்யம் சேது ரஸ்தா சி.க.சு. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் புத்தகங்களை பெற்று பயன் பெற நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இன்று முதல் (நவ.20) அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவலை பகிரவும்!
Sorry, no posts matched your criteria.