India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது<
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற ஆக.12ம் தேதி காலை10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை வஉசி தெருவில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைபள்ளி ஆசிரியர் மரியம் பிரான்சிஸ், மாணவர்களை சாதி பெயர் கூறி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி புகார் குறித்து விசாரணை நடத்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மரியம் பிரான்சிசை நேற்று சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
நாகை மக்களே உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <
நாகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’18’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <
நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற ஆக.11-ந் தேதி காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பல முன்னணி தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்களை அப்ரண்டிஸ் (தொழிற் பழகுநர்) பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளன. எனவே ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலரை (04365-243045) அணுகவும். SHARE பண்ணுங்க!
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(ஆக.6) மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், எஸ்பி சு. செல்வக்குமார் மக்களை சந்தித்து, அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 14மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு 1,500ரூ முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
Sorry, no posts matched your criteria.