India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவற்கான (ABC) திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.பவணந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!
நாகை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை தகுதியுடையவர்கள் இந்த <
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இதன் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் 21.4.25 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மே.5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 04365-253059 தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டி.என்.பி.எஸ்சி குரூப் -1மற்றும் TNUSRB_SI தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 23.4.2025 புதன் முதல் தினசரி பிற்பகல் மூன்று மணி முதல் 6:00 மணி வரை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடத்திட்ட வாரியாக வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஒ.எஸ் குழந்தைகள் இல்லத்தில் (SOS CHILDRENDS VILLAGES INDIA) பணி புரிய 10ஆம் வகுப்பு முடித்த (பெண்கள்) விதவைகள், திருமணமாகாதவர்கள் முதிர்கன்னிகள் தேர்வு நாகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியினருக்கு உடன் Share செய்து பயனடைய செய்யுங்கள்..
வேளாங்கண்ணி கீழத்தெருவை சேர்ந்த மாரியப்பன். இவர் விழுந்தமாவடியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மனைவி மற்றும் மூன்று வயது மகன் ஆகாஷுடன் ஸ்கூட்டியில் வீடு திரும்பிய போது தண்ணீர் பந்தல் அருகே நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் 3 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாய், தந்தை படுகாயத்துடன் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொன்னிசித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் மாணவருக்கான கோடைகால சிறப்பு ஓவிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வு வருகின்ற 28/4/2025 திங்கள் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை உன்னை சித்திரக்கடல் ஓவிய பயிற்சி மையத்தில் நடைபெறும் 3-5 வகுப்பு ஒரே பிரிவாகவும் 6 -12 ஒரு பிரிவாகவும் நடைபெறும். பயிற்சி தொடக்க நாள் 1.5. 2025 முதல் 31/5/2025 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
அகஸ்தியம் பள்ளி வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரயில் கோச் மாறாமல் செல்லும் வகையில் நேரடி ரயில் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்று வேதாரண்யம் வர்த்தகர் சங்கத்தினர் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 25 ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. எனவே 10ஆம் வகுப்பு முதல் படித்து வேலை தேடுவோர் தங்களது கல்வி சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.