Nagapattinam

News March 24, 2025

நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்

News March 24, 2025

ரூ.1770 கட்டணத்தில் நீச்சல் பயிற்சி

image

நாகை மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோருக்கு தகுந்த பாதுகாப்பு வசதியுடன் 5 கட்டங்களாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி உட்பட ரூ.1770 மட்டுமே பெறப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News March 24, 2025

துளசியாபட்டினம் அவ்வையாரின் சிறப்பு

image

வேதாரண்யம் கொல்லன் திடல் பகுதியில் அவ்வையார் தங்கி இருந்த போது அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவரை வேறு இடத்திற்கு செல்ல கொல்லன் கூறிய போது, வல்லனும் வெள்ளையாகி வளவனும் பேருராகி, கொல்லன் திடல் தவிர கொள்ளா பெருங்கடலை என அவர் பாடினார். அந்தஊரை சேர்ந்த வெள்ளம் வளவனாற்றில் வடிந்ததா கூறப்படுகிறது. சிறப்பு பெற்ற அவ்வைக்கு தனி சன்னதி இருப்பது தமிழகத்தில் துளசியாபட்டினத்தில் மட்டுமே என்பது தனி சிறப்பு.

News March 24, 2025

நாகையில் இலவச ஒவிய பயிற்சி

image

நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள பொன்னி சித்திர கடல் ஆர்ட் அகடாமியில் ஒவிய திறனை வெளிக்கொணரும் வகையில் திறமை மிக்க ஆசிரியர்களை கொண்டு இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு Nagai Art Academy என்ற சமூக வலைதளத்தை பின்பற்றி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 23, 2025

நாகை: மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

image

நாகை மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்கலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்பப்பள்ளியின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் 2025-ஆம் ஆண்டு முதல் வகுப்பு சேர்க்கை மாணவர்களை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் (22.03.2025) வரவேற்றனர். இதில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் துரைமுருகு மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்,பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

News March 23, 2025

திருமருகலில் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

image

திருமருகல், புத்தகரம் லயன்ஸ் சங்கம் மற்றும் எஸ்.கே மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் காசி அறிவழகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபாலசங்கர், பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

News March 23, 2025

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுர ரகசியம் தெரியுமா?

image

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 23, 2025

ரயில்வே நடைமேடையை உயர்த்த கோரிக்கை

image

கீழ்வேளூர் அருகே உள்ள கூத்தூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நடைமேடை மிகவும் தாழ்வாக அமைந்திருப்பதால் ரயிலில் ஏறுவதற்கு முதியோர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். ரயில் பெட்டிகளின் உயரம் அதிகமாக இருக்கும் நிலையில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் நடை மேடை உயர்த்தி கட்டிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News March 23, 2025

நாகை ஆர்ட் அகடாமியில் இலவச ஒவிய பயிற்சி

image

நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள பொன்னி சித்திர கடல் ஆர்ட் அகடாமியில் ஒவிய திறனை வெளிக்கொணரும் வகையில் திறமை மிக்க ஆசிரியர்களை கொண்டு இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு Nagai Art Academy என்ற சமூக வலைதளத்தை பின்பற்றி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 23, 2025

நாகையில் மகளிருக்கு இலவச அழகு கலை பயிற்சி

image

நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள ஐ.ஒ.பி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் கிராம புற மகளிருக்கு இலவச அழகு கலை பயிற்சி 26ஆம் தேதி முதல் அளிக்கப்படுகிறது. 18 வய்து முதல் 45 வரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 6374005365 / 8870940443/9047710810 தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

error: Content is protected !!