Nagapattinam

News August 10, 2025

நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

image

நாகை மாவட்டத்தில் மக்காச்சோளம் உற்பத்தியைப் பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காச்சோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். SHARE IT NOW!

News August 10, 2025

நாகை அவுரி திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்

image

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவுரி திடலில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமனது லயன்ஸ் கிளப் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி

image

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மணக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று பேருக்கு தலா ரூ.14500 வீதம் ரூ 34500 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

News August 9, 2025

நாகையில் துறைமுகம் மேம்படுத்துதல் குறித்த கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகை துறைமுகம் சம்பந்தமான கூட்டம், இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மேரி டேம் போர்டு சேர்மன் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில், தலைவர், செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாகை துறைமுகத்தை 4 மீட்டர் ஆழப்படுத்தி, சாகர்மாலா திட்ட கீழ் சிறிய கப்பல் கையாள்வதற்கு குறித்தும் அலோசிக்கப்பட்டது.

News August 9, 2025

நாகை: பெற்றோர்கள் கவனத்திற்கு! இதை தெரிஞ்சிக்கோங்க!

image

நாகை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 9, 2025

நாகையில் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

image

நாகை மாவட்டம் நாகூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் மாதவன்(44). இவர் நேற்று முன்தினம் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தலைமையாசிரியர் புனிதா கொடுத்த புகாரின்பேரில், நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாதவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

News August 9, 2025

தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

நாகை அவுரி திடலில் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிய தேர்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். மேலும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 9, 2025

நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

image

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

image

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

நாகை: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

error: Content is protected !!