Nagapattinam

News March 26, 2025

நாகையில் மார்ச் 29ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாகையில் உள்ள 193 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை தடுத்தல், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திடல், போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 26, 2025

நாகை: 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

image

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 18-28 வயதுடைய பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் cbri.res.in என்ற இனையம் மூலம் 15.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், இதனை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News March 26, 2025

வேதாரண்யத்தில் இன்று மதியம் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியர் பள்ளியில் 26.03.2025 புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் அகஸ்தியர்பள்ளியில் புறப்பட்டு திருவாரூர் செல்கிறது. இதில் இரயில்வே மிக உயர் அதிகாரிகள் 200-க்கு மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள். இதுகுறித்து வழித்தடங்களில் ஆடு மாடுகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

நாகையில் டேக்வாண்டோ பயிற்சி விரைவில் தொடக்கம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழ்நாடு கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் டேக்வாண்டோ பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவை காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 80720 55361 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 25, 2025

நாகையில் மஞ்சப்பை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மக்காத நெகிழிப் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதினை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தகுதி உடைய பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் மே 01 வரை விண்ணப்பிக்கலாம். இதனை ஆட்சியர் அலுவலக வட்டாரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

News March 25, 2025

ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகளின் விரல் பதிவு அவசியம்!

image

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவர்களின் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் விரல் ரேகையை அருகில் இருக்கும் ரேஷன் கடைகளில் பதிவு செய்வது அவசியம் என்றும், இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்திருக்கிறார். தெரிந்தவர்கள் பயனடைய உடனே அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.. 

News March 25, 2025

வலிவலத்தில் வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை

image

வலிவலம் மதகடி வாய்க்காலில் தலையில் அடிப்பட்டு பலத்த ரத்த காயங்களுடன் பண்டாரவாடை பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 36) என்ற வாலிபர் ரத்த காயங்களுடன் வாய்க்கால் தண்ணீரில் சடலமாக மிதந்தார். இதையடுத்து பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்த வலிவலம் போலீசார் ரமேஷ்குமார் எப்படி இறந்தார் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேர் செய்யுங்கள்

News March 25, 2025

நாகை: காய்கறி கடையில் புகையிலை பதுக்கி வைத்திருந்த 5பேர் கைது

image

தனிப்படை போலீஸார் நாகை நீலா கீழ வீதியில் உள்ள காய் கனி கடையில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு காய்கனி முட்டைகளுக்கு நடுவே தடை செய்யப்பட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளர் நாகூரை சேர்ந்த முகமது இப்ராஹிம், முஹம்மது ஜமில், முஹம் முஹம்மது அப்துல் ரஹ்மான், இளையராஜா ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News March 25, 2025

தூய்மை பணியாளர்களுக்கு குடும்ப உதவி தொகை

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் குடும்ப உதவி தொகையாக கல்வி மற்றும் திருமண உதவி தொகைக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்.

News March 24, 2025

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) சார்பில் தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு  கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று (24.03.2025) வழங்கினார்.

error: Content is protected !!