Nagapattinam

News March 15, 2025

நாகை: கூரைவீடு தீப்பிடித்து எரிந்து விபத்து

image

நாகூரில் பூஜையறையில் விளக்கேற்றி விட்டு கோயிலுக்கு சென்ற போது கூரைவீடு தீப்பிடித்து எரிந்து விபத்து. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பிரசாத் சத்யா தம்பதியினர் கூரைவீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாசி மகத்தை முன்னிட்டு சத்யா பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். வந்து பார்க்கையில் வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

News March 15, 2025

நாகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் 3 மணிவரை நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10000க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் <>லிங்க்<<>> இந்த இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News March 14, 2025

நாகையில் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

நாகப்பட்டினம் ஏ.டி.எம்.மகளிர் கல்லூரியில் நாளை (15.03.2025) காலை 9.00 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, காலை 11.00 மணியளவில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 14, 2025

நாகையில் ஆழ்கடல் அகழாய்வு பணிகள்

image

தென்கிழக்கு ஆசியா, மத்திய தரைக்கடல், பழந்தமிழர் மேற்கொண்டிருந்த கடல்வழி வணிகச் சிறப்பினை வெளிக்கொணரும் வகையில்,ஆழ்கடல் அகழாய்வுகளை கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தொல்லியல் அறிஞர்களின்
ஆலோசனையுடனும், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடும், காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். Share பண்ணுங்க

News March 14, 2025

நாகப்பட்டினம் மாணவிகளுக்கு இஸ்ரோ சுற்றுலா

image

“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ், 9-12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 3 மாணவிக்குழுக்கள், 2 நாள் அறிவியல் சுற்றுப்பயணமாக பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் , மற்றும் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

News March 14, 2025

நாகை: தொல்லியல் அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு

image

தமிழ்நாடு அரசின் 2025-2026 க்கான பட்ஜெட் தாக்கல் அறிவிப்பில் 8 மாவட்டங்களில் வரும் நிதியாண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டமும் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாகை மாவட்ட மக்களே SHARE பண்ணுங்க..

News March 14, 2025

குழந்தைகள் நலன் துறையின் கீழ் வேலைவாய்ப்பு

image

குழந்தைகள் நலன் துறையின் கீழ் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணி நிரப்பப்படவுள்ளது. உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தங்களது Bio-Dataவை கல்வி, அனுபவ சான்றிதழ்கள் இணைத்து 25.03.2025க்குள் நன்னடத்தை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.209 இரண்டாம் தளம், நாகை என்ற முகவரிக்கு அனுப்பவும். இந்த தகவை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 14, 2025

ரயில் பயணிகளிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

image

நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறி செய்வதாக, தொடர்ந்து நாகை ரயில்வே காவல் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கரைபேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த அருண் பாண்டியன்(36) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News March 13, 2025

வியாபாரம் பெருக அருள் புரியும் விஜயநாதேஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எடுத்த செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் வந்து தொழுகின்றனர். தொழிலில் முன்னேற வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. Share It

News March 13, 2025

நாகை: ஆற்றுப்படுத்துனருக்கு அரிய வாய்ப்பு

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் இயங்கும் நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துனர் நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வருகின்ற 25ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!